டி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

தாராபுரம் சாலை விபத்தில் பலியானோர் குடும்பத்துக்கு நிவாரணம்!

திருப்பூர் மாவட்டம், தாராபுரம் சாலை விபத்தில் உயிரிழந்த 5 பேர் குடும்பத்துக்கு நிவாரணமாக தலா ரூ. 2 லட்சம் வழங்கப்படும் என முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார். 

News image
மு.க. ஸ்டாலின் (கோப்புப் படம்)
Updated On :16 நவம்பர் 2023, 2:42 pm

DIN


திருப்பூர் மாவட்டம், தாராபுரம் சாலை விபத்தில் உயிரிழந்த 5 பேர் குடும்பத்துக்கு நிவாரணமாக தலா ரூ. 2 லட்சம் வழங்கப்படும் என முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார். 

இது தொடர்பாக முதல்வர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், திருப்பூர் மாவட்டம், தாராபுரம் வட்டம், மணக்கடவு கிராமம், லங்காட்டுப்பிரிவு
என்ற இடத்தில் இன்று (நவ. 16) மாலை டேங்கர் லாரியும், நான்கு சக்கர வானமும் நேருக்குநேர் எதிர்பாராதவிதமாக மோதிய விபத்தில் நான்கு சக்கர வாகனத்தில் பயணம் செய்த 5 பேர் உயிரிழந்தனர். 

பாலகிருஷ்ணன், மனைவி செல்வி, தமிழ்மணி, சித்ரா, கலாராணி உள்ளிட்ட 5 பேர் விபத்தில் உயிரிழந்தனர். இந்த துயரமான செய்தியினைக் கேட்டு மிகுந்த
வேதனையடைந்தேன்.

இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும் அவர்களின்
உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக்
கொள்வதோடு உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா இரண்டு லட்சம் ரூபாய் முதல்வரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.