உடல்நலக்குறைவு காரணமாக இந்திய ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் வெங்கிடரமணன் சென்னையில் இன்று காலமானார்.
அவருக்கு வயது 92 ஆகும். இந்திய ரிசர்வ் வங்கியின் 18வது ஆளுநராக பதவி வகித்தவர் எஸ் வெங்கிடரமணன். இவர் 1990 ஆம் ஆண்டில் இருந்து 1992 ஆம் ஆண்டு வரை ஆளுநராக இருந்தார்.
மேலும் 1985 ஆம் ஆண்டு முதல் 1989 வரை மத்திய நிதித்துறை செயலாளராகவும், கர்நாடக அரசின் ஆலோசகராகவும் பொறுப்பு வகித்துள்ளார். மறைந்த வெங்கிடரமணனுக்கு இரண்டு மகள்கள் உள்ளனர்.
அதில் ஒருவர் தமிழ்நாடு அரசின் முன்னாள் தலைமைச் செயலராக இருந்த கிரிஜா வைத்தியநாதன் என்பது குறிப்பிடத்தக்கது.