காரைக்கால் மீனவர்கள் 22 பேர் கைது
எல்லையில் மீன்பிடித்துக் கொண்டிருந்த இந்திய மீனவர்கள் 22 பேரை இலங்கை கடற்படை இன்று கைது செய்துள்ளது.


எல்லையில் மீன்பிடித்துக் கொண்டிருந்த இந்திய மீனவர்கள் 22 பேரை இலங்கை கடற்படை இன்று கைது செய்துள்ளது.
எல்லைகளில் மீன் பிடிக்கும் தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்வது தொடர்ந்து கொண்டிருக்கிறது. இதற்கு தமிழக அரசும் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.
இந்நிலையில் இன்று காங்கேசன் - பருத்தித் துறைக்கு இடைப்பட்ட பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த மீனவர்கள் 22 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. இவர்கள் காரைக்கால் பகுதியைச் சேர்ந்தவர்கள் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் அவர்களுடன் 2 படகுகளையும் இலங்கை கடற்படை பறிமுதல் செய்துள்ளது. கைது செய்யப்பட்டவர்கள் காங்கேசன் துறைமுகத்துக்கு அழைத்துச் செல்லப்படுகின்றனர்.
இதையும் படிக்க | பின்சுழலும் சக்கரம்! ரஷியாவில் கருக்கலைப்புக்கு நெருக்கடி!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...