காரைக்கால் மீனவர்கள் 22 பேர் கைது

எல்லையில் மீன்பிடித்துக் கொண்டிருந்த இந்திய மீனவர்கள் 22 பேரை இலங்கை கடற்படை இன்று கைது செய்துள்ளது. 
கோப்புப் படம்
கோப்புப் படம்

எல்லையில் மீன்பிடித்துக் கொண்டிருந்த இந்திய மீனவர்கள் 22 பேரை இலங்கை கடற்படை இன்று கைது செய்துள்ளது. 

எல்லைகளில் மீன் பிடிக்கும் தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்வது தொடர்ந்து கொண்டிருக்கிறது. இதற்கு தமிழக அரசும் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. 

இந்நிலையில் இன்று காங்கேசன் - பருத்தித் துறைக்கு இடைப்பட்ட பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த மீனவர்கள் 22 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. இவர்கள் காரைக்கால் பகுதியைச் சேர்ந்தவர்கள் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும் அவர்களுடன் 2 படகுகளையும் இலங்கை கடற்படை பறிமுதல் செய்துள்ளது. கைது செய்யப்பட்டவர்கள் காங்கேசன் துறைமுகத்துக்கு அழைத்துச் செல்லப்படுகின்றனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com