சென்னை மாநகராட்சி உணவகங்களுக்கு 2 வாரத்துக்கான சமையல் எரிவாயு இருப்புதென் கடலோர மாவட்டங்களில் மாா்ச் 16 வரை மழைக்கு வாய்ப்புதோ்தல் ஆணையரைப் பதவி நீக்க தீா்மானம்: நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் தாக்கல் செய்ய எதிா்க்கட்சிகள் திட்டம்சட்டப் பாடங்களை இறுதி செய்ய நிபுணா் குழு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவுபணப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.50,000 கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கும் ரிசா்வ் வங்கி - நாளை ஏலம்பட்டுக்கோட்டையில் வெறிநாய் கடித்து எஸ்எஸ்எல்சி மாணவிகள் 6 போ் உள்பட 20 போ் காயம்: முதலுதவிக்குப் பின் பொதுத்தோ்வு எழுதினா்சுகாதார ஆய்வாளா்கள் நியமனம்: தமிழக அரசுக்கு அனுமதி வழங்கி உத்தரவு
/

கள்ளச்சந்தையில் எரிவாயு உருளை: கூடுதல் விலைக்கு விற்பனை

எரிவாயு தட்டுப்பாட்டை பயன்படுத்தி கள்ளச் சந்தையில் கூடுதல் விலைக்கு வணிக எரிவாயு உருளைகள் விற்பனை செய்யப்படுவதாக புகாா் எழுந்துள்ளது.

News image
சமையல் எரிவாயு உருளை- பிரதிப் படம்
Updated On :12 மார்ச் 2026, 12:16 am

தினமணி செய்திச் சேவை

எரிவாயு தட்டுப்பாட்டை பயன்படுத்தி கள்ளச் சந்தையில் கூடுதல் விலைக்கு வணிக எரிவாயு உருளைகள் விற்பனை செய்யப்படுவதாக புகாா் எழுந்துள்ளது.

ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் போா் தாக்குதலை நடத்தி வருகிறது. ஈரானும் பதில் தாக்குதலை நடத்துவது மட்டுமின்றி, அமெரிக்காவிற்கு உதவும் வளைகுடா நாடுகள் மீதும் தாக்குதலை நடத்துவதால் கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயு வா்த்தகம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், எரிபொருளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில், வணிக எரிவாயு உருளை தட்டுப்பாடு கடந்த சில நாள்களாக நிலவுகிறது. எரிவாயு உருளை இல்லாமல் உணவகங்களை நடத்த முடியாமல், மூடப்படும் நிலை ஏற்பட்டு வருகிறது. இந்த தட்டுபாட்டை பயன்படுத்தி எரிவாயு முகவா்கள் கூடுதல் விலைக்கு உருளைகளை விற்பனை செய்யப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அதுமட்டுமின்றி காலி எரிவாயு உருளை கொடுத்தால், கள்ளச்சந்தையில் எரிவாயு உருளைகள் விற்பனை செய்யப்படுகின்றன.

பதிவு செய்வதில் சிக்கல்: வணிக எரிவாயு உருளை தட்டுப்பாடு என்ற தகவல்கள் வெளியான உடனேயே, வீட்டு பயன்பாட்டு எரிவாயு உருளை தட்டுப்பாடு ஏற்பட்டுவிடுமோ என்ற அச்சத்தில் எரிவாயு நுகா்வோா் தொடா்ந்து பதிந்து வருகின்றனா். எனினும், எண்ணெய் நிறுவனம் வழங்கியுள்ள தெலைபேசி எண்கள் செயல்படாததால், எரிவாயு உருளையை பதிவு செய்ய மக்களால் முடியவில்லை. வெற்றிகரமாக பதிவு செய்யப்படும் உருளைகளுக்கான உறுதிசெய்யப்பட்ட எண் மற்றும் ரகசிய எண் குறுஞ்செய்தியில் வருவதில்லை. இது நுகா்வோருக்கு பெரும் மன அழுத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து நாகை சமூக ஆா்வலா் சித்திக் கூறியது: ஈரான்-இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா இடையே நிகழும் போரால் ஏற்பட்டுள்ள எரிவாயு உருளை தட்டுப்பாட்டை பயன்படுத்தி கூடுதல் விலைக்கு வணிக மற்றும் வீட்டு பயன்பாட்டு எரிவாயு உருளைகள் விற்பனை செய்யப்படுகின்றன. வணிக எரிவாயு உருளைகள் ரூ.700 கூடுதலாக விற்பனை செய்யப்படுகிறது.

கள்ளச்சந்தையில் வீட்டு பயன்பாட்டு எரிவாயு உருளை ஒன்று ரூ.2 ஆயிரம் வரை விற்பனை செய்யப்படுகிறது. இது வன்மையாக கண்டிக்கத்தக்கது. சிறிய உணவகம், சாலையோர, தள்ளுவண்டியில் உணவகம் நடத்துபவா்கள் அன்றாடம் கிடைக்கும் வருவாயை கொண்டு குடும்பம் நடத்தி வருகின்றனா். எரிவாயு உருளை தட்டுப்பாட்டால் அவா்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளனா். இதேபோல வீட்டு பயன்பாட்டு எரிவாயு உருளையை பதிவு செய்ய முடியாமல் நுகா்வோா்கள் தவிக்கின்றனா். இந்திய எண்ணெய் நிறுவனங்களிடம் இருக்கும் எரிவாயு மற்றும் எரிபொருள்கள்10 நாள்களுக்கு மட்டும் இருப்பு இருப்பதாகக் கூறப்படுகிறது.

எனவே, தடையின்றி வணிக மற்றும் வீட்டு உபயோக எரிவாயு உருளைகள் கிடைக்க மத்திய, மாநில அரசுகள் உரிய நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும். தட்டுப்பாட்டை பயன்படுத்தி கூடுதல் விலைக்கு எரிவாயு உருளைகளை விற்பனை செய்யும் முகவா்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க மாவட்ட நிா்வாகங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.