தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களுடன் ராகுல் கலந்துரையாடல்!வீட்டில் தங்க அனுமதி வேண்டும்! நீதிமன்றத்தில் விஜய்யின் மனைவி சங்கீதா இடைக்கால மனு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!திருச்சி மாநாட்டில் பங்கேற்க தொண்டர்களுக்கு மு.க. ஸ்டாலின் அழைப்பு!5 நாள்களுக்குப் பிறகு தங்கம் விலை சவரனுக்கு ரூ. 720 உயர்வு!அதிரடியாக வீட்டு உபயோக, வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்வு!சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவு
/

புதுக்கோட்டையில் 200ஐ தாண்டிய டெங்கு பாதிப்பு!

புதுக்கோட்டையில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு 200ஐ தாண்டியுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

News image
Updated On :27 நவம்பர் 2023, 8:15 am

DIN

புதுக்கோட்டையில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு 200ஐ தாண்டியுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

கடந்த சில மாதங்களாக டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. அதேசமயம் டெங்கு காய்ச்சல் பரவாமல் தடுக்க மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

இந்த நிலையில் புதுக்கோட்டையில் டெங்கு காய்ச்சல் அதிகளவில் பரவி வருகின்றது. நேற்று ஒரேநாளில் 59 பேர் காய்ச்சல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதனிடையே காய்ச்சலால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 229 ஆக உயர்ந்துள்ளது. நாளுக்கு நாள் டெங்கு காய்ச்சல் எண்ணிக்கை அதிகரித்துவருவது மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

அதேபோன்று திருச்சி மாவட்டத்திலும் டெங்கு பாதிப்பு உயர்ந்துள்ளது. ஒரே நாளில் 18 பேருக்கு காய்ச்சல் பரவியுள்ள நிலையில் மொத்த பாதிப்பு 284 ஆக உள்ளது. காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 83 பேர் 12 வயதுக்குள்பட்டவர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.