சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

கன்னியாகுமரி மாவட்டத்துக்கு டிச.4-ல் உள்ளூர் விடுமுறை

கன்னியாகுமரி மாவட்டத்துக்கு டிசம்பர் 4 ஆம் தேதி  விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

News image
Updated On :28 நவம்பர் 2023, 7:52 am

DIN

கன்னியாகுமரி மாவட்டத்துக்கு டிசம்பர் 4 ஆம் தேதி  உள்ளூர் விடுமுறையை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

நாகர்கோவிலில் உள்ள புனித சவேரியார் தேவாலய திருவிழாவையொட்டி மாவட்ட ஆட்சியர்  உள்ளூர் விடுமுறை அறிவிப்பை அறிவித்துள்ளார்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் புகழ்மிக்க கத்தோலிக்க திருத்தலமான நாகா்கோவில் கோட்டாறில் உள்ள புனித சவேரியாா் பேராலயத் திருவிழா கடந்த வெள்ளிக்கிழமை மாலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

8 ஆம் நாளான டிச. 1இல் மாலை 6.30 மணிக்கு குழித்துறை மறைமாவட்ட அருள்பணியாளா்கள் தலைமை வகித்து ஆடம்பரக் கூட்டு திருப்பலி நிறைவேற்றுகின்றனா். கோட்டாறு பங்கு அருள்பணிப் பேரவையினா் சிறப்பிக்கின்றனா்.

டிச.2 இல் மாலை 6.30 மணிக்கு கோட்டாறு மறைமாவட்ட முன்னாள் ஆயா் பீட்டா் ரெமிஜியூஸ் திருப்பலி நிறைவேற்றுகிறாா். அன்று இரவு 10.30 மணிக்கும், டிச.3இல் இரவு 10 மணிக்கு சவேரியாரின் தோ்பவனி நடைபெறுகிறது.

நிறைவு நாளான டிச.4ஆம் தேதி காலையில் கோட்டாறு மறைமாவட்ட ஆயா் நசரேன் சூசை பெருவிழா திருப்பலி நிறைவேற்றுகிறாா். 8 மணிக்கு மலையாளத் திருப்பலி நடைபெறும். இதில், திருவனந்தபுரம் உயா் மறைமாவட்ட ஆயா் கிளாடின்அலெக்ஸ் தலைமை வகித்து திருப்பலி நிறைவேற்றி மறையுரையாற்றுகிறாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.