பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,200 புள்ளிகள் குறைந்தது!தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் கல்விச் சிந்தனை அரங்கு தொடக்கம்! போர் பதற்றம்! அமெரிக்காவுடன் மீண்டும் பேச்சுவார்த்தை; ஈரான் பாதுகாப்புத் தலைவர் முயற்சி தங்கம், வெள்ளி விலை குறைவுபிளஸ் 2 பொதுத்தோ்வு இன்று தொடக்கம் பிளஸ் 2 தேர்வு எழுதவுள்ள மாணவர்களுக்கு அமைச்சர் அன்பில் மகேஸ் வாழ்த்து
/

சென்னை கட்டுப்பாட்டு மையத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் ஆய்வு

தொடர் மழையால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து சென்னை ரிப்பன் மாளிகையில் உள்ள கட்டுப்பாட்டு மையத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று(வியாழக்கிழமை) ஆய்வு மேற்கொண்டார். 

News image
சென்னை ரிப்பன் மாளிகையில் உள்ள கட்டுப்பாட்டு மையத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின்.
Updated On :30 நவம்பர் 2023, 4:35 pm

DIN

தொடர் மழையால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து சென்னை ரிப்பன் மாளிகையில் உள்ள கட்டுப்பாட்டு மையத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று(வியாழக்கிழமை) ஆய்வு மேற்கொண்டார். 

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், சென்னை உள்பட மாநிலம் முழுவதும் கடந்த சில நாள்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. தொடர்ந்து, அடுத்த 5 நாள்களுக்கு மிக கனமழை எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. 

Story image

இதனிடையே தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி காரணமாக சென்னை மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளில் நேற்று(புதன்கிழமை) காலை முதல் மழை பெய்து வருகின்றது. நேற்று மாலை சென்னையின் பெரும்பாலான பகுதிகளில் கனமழை பெய்ததில் பல பகுதிகளில் நீர் தேங்கியது. அவற்றை அகற்றும் பணியில் மாநகராட்சி ஈடுபட்டு வருகிறது. 

இந்நிலையில், சென்னை மாநகராட்சி ரிப்பன் மாளிகையில் உள்ள அவசர கட்டுப்பாட்டு மற்றும் கண்காணிப்பு மையத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று ஆய்வு மேற்கொண்டார்.

மேலும், சென்னையில் மழை பாதிப்பு மற்றும் மழை நீர் அகற்றம் தொடர்பாக மேற்கொள்ளப்படும் பணிகள் குறித்து சென்னை மேயர் பிரியா, ஆணையர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.