சென்னை பல்கலை. தேர்வுகள் ஒத்திவைப்பு

சென்னை பல்கலைக்கழகத்தில் இன்று நடைபெறவிருந்த தேர்வுகள் ஒத்திவைப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை பல்கலை
சென்னை பல்கலை

சென்னை: சென்னை பல்கலைக்கழகத்தில் இன்று நடைபெறவிருந்த தேர்வுகள் ஒத்திவைப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் புதன்கிழமை காலைமுதல் கனமழை பெய்து வருகின்றது. இதனால், பல்வேறு பகுதிகளில் மழைநீர் தேங்கியுள்ளதால் மக்களின் அன்றாட வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

மேலும், சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் இன்றும் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதன்காரணமாக சென்னை பல்கலைக்கழக மாணவர்களுக்கு இன்று நடைபெறவிருந்த செமஸ்டர் தேர்வுகளை ஒத்திவைப்பதாக பல்கலைக்கழக நிர்வாகம் அறிவித்துள்ளது.

தேர்வு நடைபெறும் தேதி குறித்து பின்னர் அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com