கனமழை காரணமாக, கன்னியாகுமரி மாவட்டத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் செவ்வாய் முதல் ஞாயிற்றுக்கிழமை (அக்.3 முதல் 8-ஆம் தேதி) வரை ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் சென்னை வானிலை அறிவித்து இருந்தது.
இதையும் படிக்க: அண்ணாமலை தில்லி பயணத்தால் பாஜக நிர்வாகிகள் கூட்டம் ரத்து!
இந்த நிலையில், கன்னியாகுமரி மாவட்டத்தில் பெய்துவரும் கனமழை காரணமாக, அந்த மாவட்ட பள்ளிகளுக்கு ஆட்சியர் விடுமுறையை அறிவித்துள்ளார்.