தயாநிதி மாறனுக்கு வந்த போன் கால்.. ஓடிபி சொல்லாமலே ரூ.1 லட்சம் மோசடி

தயாநிதி மாறனுக்கு வந்த போன் கால்.. ஓடிபி சொல்லாமலே ரூ.1 லட்சம் மோசடி

வங்கிக் கணக்கிலிருந்து ஓடிபி சொல்லாமலேயே வடமாநில கும்பல் ஒன்று கைவரிசைக் காட்டியிருப்பதாக காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

சென்னை: சென்னையில் வசித்து வரும் திமுக நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் மற்றும் அவரது மனைவியின் ஒருங்கிணைந்த வங்கிக் கணக்கிலிருந்து ஓடிபி சொல்லாமலேயே வடமாநில கும்பல் ஒன்று கைவரிசைக் காட்டியிருப்பதாக காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

திமுக எம்.பி. தயாநிதி மாறன் மற்றும் அவரது மனைவியின் இணைப்பு ஜிபே கணக்கிலிருந்து ரூ.1 லட்சம் மோசடி நடந்திருப்பதாக சென்னை பெருநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் இன்று புகார் அளிக்கப்பட்டுள்ளது.

அந்தப் புகாரில், புதிய தொடர்பு எண் வந்ததும் எடுத்துப் பேசினோம். ஹிந்தியில் பேசிய நபர்கள் 3 முறை தொலைபேசியில் அழைத்தனர். அப்போது, எந்த ஓடிபி எண்ணும் சொல்லாமலேயே, வங்கிக் கணக்கிலிருந்து ரூ.1 லட்சம் மோசடி செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் தயாநிதி மாறனின் மனைவி மலேசியாவில் இருப்பதாகவும், அவருக்கு செல்போனில் இந்த அழைப்புகள் வந்ததாகவும் புகாரில் கூறப்பட்டுள்ளது.

புதிய எண்ணிலிருந்து அழைத்தபோது, ஹிந்தியில் பேசிய நபர்கள் 3 முறை தொடர்ந்து அழைத்த பின், திடீரென ஒரே பரிவர்த்தனையில் ரூ.1 லட்சம் வங்கிக் கணக்கிலிருந்து எடுக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினரின் வங்கிக் கணக்கிலிருந்து, ஓடிபி எண் சொல்லாமலேயே, கைப்பேசி அழைப்பின் மூலமே  பணம் மோசடி செய்யப்பட்டிருப்பது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com