புதுக்கோட்டை: புரட்டாசி மாத கடைசி சனிக்கிழமை மற்றும் மகாளய அமாவாசையை முன்னிட்டு புதுக்கோட்டை நகரில் சாந்தாரம்மன் கோவில் அருகேயுள்ள பல்லவன் குளக்கரையில் ஏராளமானோர் சனிக்கிழமை ஏராளமான பொதுமக்கள் மறைந்த தங்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் அளித்தனர்.
புதுக்கோட்டை நகரிலிருந்து மட்டுமின்றி கந்தர்வகோட்டை, ஆலங்குடி, பொன்னமராவதி பகுதியிலிருந்தும் இங்கு பொதுமக்கள் வந்திருந்தனர்.
தீயணைப்புப்படையினர் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர். போலீஸார் கண்காணிப்பு மற்றும் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.