
பங்காரு அடிகளாரின் மறைவு வேதனையளிப்பதாக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், பெண்களை கருவறைக்குள் அனுப்பிய முதல் பீடாதிபதியான சித்தர்பீடத்தின் குரு பங்காரு அடிகளாரின் மறைவு வேதனையளிக்கிறது. அவர் பிறப்பால் ஆண் என்றாலும் அனைவராலும் அம்மா என அழைக்கப்பட்டவர்.
அந்த அளவுக்குத் தாய்மை பண்புகளால் மகளிரின் பேரன்பைப் பெற்றவர். ஆன்மீகத் தளத்தில் பெண்களுக்கான மதிப்பீட்டைப் பெரிதும் உயர்த்தியவர்.
சங்பரிவார் சனாதனிகளின் சூழ்ச்சிக்குப் பலியாகமல் அவர்களுக்கு ஒரு சவாலாக இயங்கியவர்.
மறைந்த அடிகளாருக்கு விசிக சார்பில் எமது வீரவணக்கத்தைச் செலுத்துகிறோம். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.