சென்னை மாநகரைச் சுற்றியுள்ள நீர்நிலைகளில் பொழுதுபோக்கு மையங்கள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சென்னை நகரை அழகுப்படுத்தவும் பொதுமக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்யவும் சென்னை மாநகராட்சி பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்த வகையில் நகரின் பல்வேறு பகுதிகளில் பொழுதுபோக்கு மையங்களை தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது.
குறிப்பாக ஏரிகள், குளங்கள் போன்ற நீர்நிலைப் பகுதிகளில் உள்ளூர் பொழுதுபோக்கு மையங்களை அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக மாநகராட்சி அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.