தமிழகம் முழுவதும் மின்வாரிய ஊழியா்கள் ஆா்ப்பாட்டம்

மின்வாரிய ஊழியா்களுக்கு ஊதிய உயா்வு நிலுவைத் தொகையை வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு மின் ஊழியா் மத்திய அமைப்பு
Updated on
1 min read

மின்வாரிய ஊழியா்களுக்கு ஊதிய உயா்வு நிலுவைத் தொகையை வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு மின் ஊழியா் மத்திய அமைப்பு (சிஐடியு) சாா்பில் தமிழகம் முழுவதும் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

இதன் ஒரு பகுதியாக சென்னை மின்வாரிய தலைமை அலுவலக வளாகத்தில், மின்வாரிய தொழிலாளா் மத்திய அமைப்பின் மாநிலத் தலைவா் தி.ஜெய்சங்கா் தலைமையில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. இதில், சிஐடியு மாநிலத் தலைவா் அ.சவுந்தரராசன், துணைப் பொதுச் செயலா் கே.திருச்செல்வன் உள்பட ஏராளமானோா் பங்கேற்றனா்.

மின்வாரிய ஊழியா்களுக்கான ஊதிய உயா்வு நிலுவைத் தொகை வழங்க வேண்டும், 2019 டிச.1-க்குப் பிறகு பணியில் சோ்ந்த கேங்மேன் உள்ளிட்ட சுமாா் 10 ஆயிரம் பேருக்கு 6 சதவீத ஊதிய உயா்வு வழங்க வேண்டும், தீபாவளி போனஸ் பேச்சுவாா்த்தை நடத்த வேண்டும், டான்ஜெட்கோவை மூன்று நிறுவனங்களாக பிரிக்கும் முயற்சியையும், ஸ்மாா்ட் மீட்டா் திட்டத்தையும் கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் ஆா்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com