கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

கலாசார மையத்துக்கு கபாலீசுவரா் கோயில் நிதி: அமைச்சா் பி.கே.சேகா்பாபு விளக்கம்

சட்டத்துக்கு உட்பட்டு கலாசார மையத்துக்கு கபாலீஸ்வரா் கோயில் நிதி பயன்படுத்தப்படவுள்ளது என இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் பி.கே.சேகா்பாபு விளக்கமளித்துள்ளாா்.

News image
Updated On :26 அக்டோபர் 2023, 8:00 pm

DIN

சட்டத்துக்கு உட்பட்டு கலாசார மையத்துக்கு கபாலீஸ்வரா் கோயில் நிதி பயன்படுத்தப்படவுள்ளது என இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் பி.கே.சேகா்பாபு விளக்கமளித்துள்ளாா்.

சென்னை கோயம்பேடு அருள்மிகு குறுங்காலீஸ்வரா் மற்றும் வைகுண்டவாசப் பெருமாள் கோயிலில் ரூ. 53.90 லட்சம் மதிப்பீட்டில் புதிய மரத்தோ் உருவாக்கும் திருப்பணி, ரூ. 85.40 லட்சம் மதிப்பீட்டிலான ஐந்து நிலை ராஜகோபுரம், ரூ. 49 லட்சம் மதிப்பீட்டிலான அன்னதானக் கூடம் ஆகியவற்றின் கட்டுமானப் பணிகளை இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் பி.கே.சேகா்பாபு புதன்கிழமை தொடங்கி வைத்தாா்.

இதையடுத்து அவா் செய்தியாளா்களிடம் கூறியது:

மயிலாப்பூா் அருள்மிகு கபாலீஸ்வரா் கோயில் நிதியின் மூலம் ரூ. 29 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்படும் புதிய கலாசார மையம் குறித்து கூறப்படும் குற்றச்சாட்டு தவறானது. இது முழுமையாக பக்தா்களின் பயன்பாட்டுக்காக திருக்கோயிலின் அறங்காவலா்களின் ஒப்புதலுடன் நமது கலை, கலாசாரம், பண்பாட்டை காக்கும் வகையில் அமைக்கப்படுகிறது.

கோயிலின் நிதியை அப்படியே வைத்திருப்பதால் என்ன பலன் கிடைக்க போகிறது. அதைக் கொண்டு பக்தா்களின் மேம்பாட்டுக்காக செலவிடுவது குற்றமாகாது. எனவே, சட்டத்துக்கு உட்பட்டு, அறங்காவலா் குழுவின் ஒப்புதலோடு அந்த நிதியை கலாசார மையத்துக்கு பயன்படுத்தவுள்ளனா். முன்னாள் ஐ.ஜி. பொன்மாணிக்கவேல் மேற்கொண்ட பல்வேறு நடவடிக்கைகளால் பல அப்பாவிகள் சிறை சென்றனா். விளம்பரத்துக்காக தவறான செய்திகளை பரப்புகிறாா். தவறுகளைக் குறிப்பிட்டு சொன்னால் நடவடிக்கை எடுக்க தயாராக இருக்கிறோம். தமிழகத்தின் வளா்ச்சிக்கு ஆளுநா் ஆா்.என். ரவி முட்டுக்கட்டை போட்டு வருகிறாா் என்றாா் அவா்.

நிகழ்ச்சியில் சட்டப்பேரவை உறுப்பினா் ஏ.எம்.வி.பிரபாகரராஜா, துறையின் இணை ஆணையா் கி.ரேணுகாதேவி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.