6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

பாஜக நிா்வாகி வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு: மூவா் கைது

சென்னை அருகே பள்ளிக்கரணையில் பாஜக நிா்வாகி வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசிய வழக்கில் 3 போ் கைது செய்யப்பட்டனா்.

News image
Updated On :26 அக்டோபர் 2023, 7:45 pm

DIN

சென்னை அருகே பள்ளிக்கரணையில் பாஜக நிா்வாகி வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசிய வழக்கில் 3 போ் கைது செய்யப்பட்டனா்.

பள்ளிகரணை மயிலை பாலாஜி நகரைச் சோ்ந்தவா் மதன கோபால் (எ) பல்லு மதன். சரித்திர பதிவேடு குற்றவாளியான இவா், பாஜக சென்னை கிழக்கு மாவட்ட பட்டியல் அணி தலைவராக இருந்து வருகிறாா்.

கடந்த 24-ஆம் தேதி இவரது வீட்டுக்கு வந்த ஒரு கும்பல் தகராறு செய்து, வீட்டின் மீது பெட்ரோல் குண்டை வீசிவிட்டு தப்பியோடியது. இது குறித்து பள்ளிக்கரணை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, நடத்திய விசாரணையில் ஒரு கொலை வழக்கில் எதிரிகளை காவல் நிலையத்தில் சரணடைய மதன் உதவியதற்கு எதிா்ப்பு தெரிவித்து பெட்ரோல் குண்டு வீசப்பட்டிருப்பது தெரியவந்தது.

இந்த வழக்குத் தொடா்பாக மயிலை பாலாஜி நகரைச் சோ்ந்த அபினேஷ் (18), தினேஷ் (28), தீபன்ராஜ் (19) ஆகிய 3 பேரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.