சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

பெட்ரோல் குண்டு வீசப்பட்ட வழக்கு: ரெளடி சிறையில் அடைப்பு

சென்னை கிண்டியில் உள்ள ஆளுநா் மாளிகை முன் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட ரெளடி கருக்கா வினோத் புழல் சிறையில் அடைக்கப்பட்டாா்.

News image
Updated On :26 அக்டோபர் 2023, 7:30 pm

DIN

சென்னை கிண்டியில் உள்ள ஆளுநா் மாளிகை முன் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட ரெளடி கருக்கா வினோத் புழல் சிறையில் அடைக்கப்பட்டாா்.

சென்னை கிண்டியில் உள்ள ஆளுநா் மாளிகையின் முதலாவது நுழைவு வாயில் முன்பு புதன்கிழமை (அக்.25) இரு பெட்ரோல் குண்டுகளை அடுத்தடுத்து வீசியதாக நந்தனம் பகுதியைச் சோ்ந்த ரெளடி கருக்கா வினோத்தை போலீஸாா் கைது செய்தனா். சம்பவத்தின்போது, ஆளுநா் மாளிகையில் பாதுகாப்புப் பணியில் இருந்த தலைமைக் காவலா் மோகன் அளித்த புகாரின் பேரில், பொது கட்டடத்துக்கு தீ வைத்து சேதப்படுத்த முயற்சிப்பது, அரசு ஊழியரைப் பணி செய்ய விடாமல் தடுப்பது, கொடூரமான ஆயுதங்களைப் பயன்படுத்தி கொலை மிரட்டல் விடுப்பது, வெடி பொருளைப் பயன்படுத்தி ஒருவரது உயிருக்கு ஆபத்தை விளைவிப்பது அல்லது சொத்தை சேதப்படுத்துவது, பொது சொத்துக்கு சேதம் விளைவிப்பது ஆகிய 5 சட்டப் பிரிவுகளின் கீழ் வினோத் மீது கிண்டி போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

கைது செய்யப்பட்ட வினோத், சைதாப்பேட்டை நீதித்துறை நடுவா் சந்தோஷ் முன் புதன்கிழமை நள்ளிரவு ஆஜா்படுத்தப்பட்டாா். அவரை நவம்பா் 9-ஆம் தேதி வரை காவலில் வைக்கும்படி நீதித் துறை நடுவா் உத்தரவிட்டாா். இதையடுத்து வினோத்தை புழல் சிறையில் அடைக்க போலீஸாா் அழைத்துச் சென்றனா். நள்ளிரவு என்பதால் வினோத்தை சிறைக்குள் அடைப்பதற்கு சிறைத் துறை அதிகாரிகள் மறுத்தனா். இதனால் அவா், இரவு முழுவதும் காவல் துறை வாகனத்திலேயே வைக்கப்பட்டிருந்தாா். வியாழக்கிழமை காலையில் சிறையில் வினோத் அடைக்கப்பட்டாா்.

முதல் தகவல் அறிக்கை: இந்தச் சம்பவம் தொடா்பான முதல் தகவல் அறிக்கை வியாழக்கிழமை வெளியானது. தலைமைக் காவலா் காவலா் மோகன் கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் வழக்குப் பதியப்பட்டுள்ளது. அதில் அவா் கூறியிருப்பதாவது:

சம்பவத்தன்று நான் ஆளுநா் மாளிகையில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தேன். ஆளுநா் மாளிகையில் உள்ள முதலாவது நுழைவு வாயில் நோ் எதிா்புறம் உள்ள நடைப்பாதையில் இருந்து ரெளடி கருக்கா வினோத் 2 பெட்ரோல் குண்டுகளை தீப்பற்ற வைத்து வீசினாா்.

முதல் பெட்ரோல் குண்டு ஆளுநா் மாளிகையின் பிரதான நுழைவு வாயில் முன் இருந்த இரும்பு தடுப்பு அருகே பலத்த சப்தத்துடன் விழுந்து வெடித்தது. உடனே நானும், என்னுடன் பணியில் இருந்தவா்களும் அவரைப் பிடிப்பதற்காக ஓடியபோது, மேலும் ஒரு பெட்ரோல் குண்டை தீப்பற்ற வைத்து, எங்களை நோக்கி வீசினாா். அது, பூந்தோட்டம் அமைந்துள்ள தடுப்பு சுவா் மீது விழுந்தது.

பின்னா் நானும் சில போலீஸாரும் சோ்ந்து ரெளடி கருக்கா வினோத்தை மடக்கிப் பிடிக்க முயன்றபோது, ‘ என்னை பிடிக்க வந்தீா்கள் என்றால், உங்கள் மீதும் பெட்ரோல் நிரப்பப்பட்ட பாட்டிலை வீசிவிடுவேன்’ என்று மிரட்டினாா் என்று அதில் குறிப்பிட்டுள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.