சென்னை, 13 மாவட்டங்களில் அடுத்த 2 மணிநேரத்துக்கு மழை தொடரும்!

தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் பகல் 1 மணிவரை பரவலாக மழை தொடரும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் திங்கள்கிழமை தெரிவித்துள்ளது.
அம்பத்தூர் தொழிற்பேட்டையில் மழை
அம்பத்தூர் தொழிற்பேட்டையில் மழை

தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் பகல் 1 மணிவரை பரவலாக மழை தொடரும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் திங்கள்கிழமை தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழை தொடங்கிய நிலையில், மாநிலம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகின்றது. இதற்கிடையே, இலங்கை மற்றும் அதனையொட்டிய குமரிக் கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாகவும் இன்று மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில், சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், விழுப்புரம், கடலூர், பெரம்பலூர், அரியலூர், தஞ்சாவூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் மற்றும் விருதுநகர் மாவட்டங்களில் இன்று பகல் 1 மணிவரை மிதமான மழை தொடரும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com