திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கிற்கு 2 தொகுதிகள் மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் பதற்றம் மிகுந்த கவலை அளிப்பதாக வெளியுறவு அமைச்சகம் அறிக்கை!திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கிற்கு 2 தொகுதிகள்துபை சர்வதேச விமான நிலையங்கள் மறு அறிவிப்பு வரும் வரை மூடல்ஈரான் மீது தாக்குதல் - அமெரிக்கா, இஸ்ரேலுக்கு உக்ரைன் ஆதரவு!மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகள்: திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு!அமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போர்: சர்வதேச அளவில் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் - பிரான்ஸ் அதிபர்!தமிழ்நாட்டில் 17 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்களைப் பாதுகாக்க உடனடி நடவடிக்கை: அரசுக்கு ராகுல் காந்தி வலியுறுத்தல்ஆந்திரம்: பட்டாசு ஆலை விபத்தில் பலி எண்ணிக்கை 18-ஆக உயர்வுபஹ்ரைன் நாட்டிலுள்ள தமிழர்கள் பாதுகாப்பாக உள்ளதாக தகவல்மத்திய கிழக்கு நாடுகளுக்கு விமான சேவை நிறுத்தம்!சரணடையுங்கள் அல்லது மரணத்தை எதிர்கொள்ளுங்கள்: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கை
/

என்ன, ஆகஸ்ட் மாதம் சென்னையில் 94% கூடுதல் மழைப் பதிவா?

நாட்டில் கடந்த ஆகஸ்ட் மாதம் மிக வறட்சியான மாதம் என அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில், சென்னையிலோ நிலைமை தலைகீழாக உள்ளது.

News image
கோப்புப்படம்
Updated On :2 பிப்ரவரி 2024, 2:56 am

DIN


சென்னை: 1901ஆம் ஆண்டு அதாவது கிட்டத்தட்ட 122 ஆண்டுகளுக்குப் பின் நாட்டில் கடந்த ஆகஸ்ட் மாதம் மிக வறட்சியான மாதம் என அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில், சென்னையிலோ நிலைமை தலைகீழாக உள்ளது.

சென்னையில் கடந்த ஆகஸ்ட் மாதம் இயல்பான அளவை விட 94 சதவிதம் கூடுதல் மழைப்பொழிவு அதாவது 259.4 மி.மீ. மழை பதிவாகியிருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை: 1901ஆம் ஆண்டு அதாவது கிட்டத்தட்ட 122 ஆண்டுகளுக்குப் பின் நாட்டில் கடந்த ஆகஸ்ட் மாதம் மிக வறட்சியான மாதம் என அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில், சென்னையிலோ நிலைமை தலைகீழாக உள்ளது.

சென்னையில் கடந்த ஆகஸ்ட் மாதம் இயல்பான அளவை விட 94 சதவிதம் கூடுதல் மழைப்பொழிவு அதாவது 259.4 மி.மீ. மழை பதிவாகியிருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

எல் நினோ காரணமாக நாட்டில் பருவமழை மிக மோசமாக பாதிக்கப்படலாம் என்று நிபுணர்கள் எச்சரித்திருக்கும் நிலையில், தென்மேற்குப் பருவமழை சற்று ஓய்வெடுத்து, அண்டை மாநிலங்களில் மழைப் பொழிவை குறைவாகக் கொடுத்திருந்த அதே வேளையில், தமிழகத்தில் நல்ல மழைப்பொழிவை அளித்துள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.

இந்த நிலையில், தமிழகத்தில் பரவலாக அடுத்த இரண்டு நாள்களுக்கு பலத்த மழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இந்த வார இறுதியில் சென்னையில் பரவலாக மழை பெய்யும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை மட்டுமல்லாமல், சென்னையை ஒட்டியிருக்கும் மாவட்டங்களிலும் கடந்த ஆகஸ்ட் மாதத்தில் நல்ல மழை பதிவாகியிருந்தது. திருவள்ளூர் மாவட்டத்திலும் 239.9 மி.மீ. மழையும் (76% கூடுதல் மழை), செங்கல்பட்டு மாவட்டத்தில் 107.3 மி.மீ. மழையும் (16% குறைவு), காஞ்சிபுரத்தில் 158.5 மி.மீ. மழையும் (12 சதவிதம் அதிகம்) பதிவாகியிருக்கிறது. 

வழக்கமாகவே சென்னை உள்பட தமிழகத்தில் செப்டம்பர் மாதம் என்றால் நல்ல மழைப்பொழிவு இருக்கும்.  பார்க்கலாம். இந்த செப்டம்பர் மாதம் தமிழகத்துக்கு எப்படி இருக்கப்போகிறது என்று?
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.