வண்டலூர் அண்ணா உயிரியல் பூங்காவில் வரும் சனிக்கிழமை(செப்.9) முதல் புதிய கட்டணமுறை அமல்படுத்தப்படும் என்று பூங்கா நிர்வாகம் அறிவித்துள்ளது.
நான்கு உயிரியல் பூங்காக்களின் நுழைவுக் கட்டணத்தை திருத்தியமைத்த நிலையில் வண்டலூா், கிண்டி உயிரியல் பூங்காக்களில் கட்டணங்கள் உயா்த்தப்பட்டன.
அதன்படி வண்டலூரில் நுழைவுக்கட்டணம் ரூ.115-லிருந்து ரூ.200-ஆக உயா்த்தப்பட்டது. அதே நேரத்தில் வெளிநாட்டினருக்கான நுழைவுக்கட்டணம் ரூ.315 குறைக்கப்பட்டது.
சென்னை கிண்டி குழந்தைகள் பூங்காவுக்கான நுழைவுக் கட்டணம் ரூ.60 ஆகவும், 5 முதல் 12 வயதுக்குள்பட்ட குழந்தைகளுக்கு ரூ.10 ஆகவும் அதிகரிக்கப்பட்டது.
இதையும் படிக்க: ஜி-20 மாநாடு: அதிகாலை முதல் மெட்ரோ ரயில் சேவை தொடக்கம்!
இந்த நிலையில், புதிய கட்டணமுறை வரும் செப்டம்பர் 9 ஆம் தேதி முதல் அமல்படுத்தப்படும் என்று பூங்கா நிர்வாகம் அறிவித்துள்ளது.