நடிகர் விஜய் தனது மக்கள் இயக்கப் பணிகளை தற்போது தீவிரப்படுத்தியுள்ளார்.
அடுத்தகட்ட நகர்வாக விஜய் மக்கள் இயக்க மகளிர் அணி கூட்டம் செப்டம்பர் 9 ஆம் தேதி சென்னையை அடுத்த பனையூரில் நடைபெறுகிறது.
விஜய் மக்கள் இயக்கத்தில் மகளிரணி பங்களிப்பு குறித்து ஆலோசனை நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த கல்வியாண்டில் 10 மற்றும் 12-ஆம் வகுப்பு பொதுத்தோ்வில் தமிழகம் முழுவதும் உள்ள 234 சட்டப்பேரவை தொகுதிகளில் முதல் மூன்று இடங்களை பெற்ற மாணவ, மாணவிகளுக்கு கடந்த ஜூன் மாதம் நடைபெற்ற கல்வி நிகழ்ச்சியில் ஊக்கத்தொகை வழங்கினார்.
இதையும் படிக்க: 40 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிட தயார்: டிடிவி தினகரன்
மேலும், விஜய் மக்கள் இயக்கம் சார்பில் 'இலவச சட்ட ஆலோசனை மையம்' அமைக்க முடிவு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.