மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றம்! மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம்! தேமுதிக, பாமக ஆதரவு!மேக்கேதாட்டு அணை கட்ட முயற்சிக்கும் கர்நாடக அரசுக்கு கண்டனம்! அமைச்சர் ராஜேஷ் மேக்கேதாட்டு அணைக்கு எதிர்ப்பு! பேரவையில் முதல் தீர்மானத்தை முன்மொழிந்தார் முதல்வர் விஜய்!எனது அன்புச் சகோதரர்! ராகுலுக்கு முதல்வர் விஜய் பிறந்த நாள் வாழ்த்து! சட்டப்பேரவையில் இன்று இரங்கல் தீர்மானம்!27 மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கைமேக்கேதாட்டு அணைக்கு எதிராக பேரவையில் இன்று தீா்மானம்: முதல்வா் விஜய் முன்மொழிகிறாா்அமெரிக்க மத்திய வங்கி வட்டி விகிதத்தில் மாற்றமில்லை!அஞ்சல் துறை லோக் அதாலத்: ஜூன் 30-க்குள் மனுக்களை அனுப்பலாம்ஜந்தா் மந்திரில் நாளை இரண்டாம் கட்ட போராட்டம்: கரப்பான்பூச்சி மக்கள் கட்சிநாடு முழுவதும் மேலும் 3 கோடி குடும்ப அட்டைகள் வழங்க வாய்ப்பு - மத்திய அமைச்சா் தகவல்பிஎம் கிசான் திட்டத்தின்கீழ் 9.44 கோடி விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நாளை பணம் டெபாசிட் - பிரதமா் மோடி தொடங்கி வைக்கிறாா்பிரிக்ஸ் தேசிய பாதுகாப்பு ஆலோசகா் மாநாட்டில் பங்கேற்பதாக சீனா அறிவிப்புநீட் தோ்வன்று ரயில் நிலையங்களில் உதவி மையங்கள்ரூ. 2,400 கோடி வேலைவாய்ப்பு ஊக்கத்தொகை: இன்று பிரதமா் வழங்குகிறாா் - நாடு முழுவதும் நேரலைகுடியரசு துணைத் தலைவா் இன்று லடாக் பயணம்
/

மணப்பாறை: குளத்தில் மூழ்கி மாணவி பலி; இருவரை துணிச்சலுடன் மீட்ட மாணவன்

மணப்பாறை அருகே குளத்தில் மூழ்கி 7ம் வகுப்பு மாணவி பலியாகியுள்ள சம்பவம் அங்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

News image
Updated On :8 செப்டம்பர் 2023, 2:57 pm IST

மணப்பாறை அருகே குளத்தில் மூழ்கி 7ம் வகுப்பு மாணவி பலியாகியுள்ள சம்பவம் அங்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த வையம்பட்டியை அடுத்த கடப்பமரத்துப்பட்டியைச் சேர்ந்தவர் மலைச்சாமி. இவரது மகள் விஸ்வஜோதி வயது 12. இவர் என்.பூலாம்பட்டியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் 7ம் வகுப்பு படித்து வந்தார். நேற்று விடுமுறை தினம் என்பதால் அங்குள்ள முத்தாளம்மன் குளத்தில் விளையாடிக் கொண்டு குளித்துக் கொண்டிருந்த விஸ்வஜோதியுடன் அவரது சகோதரி மகர ஜோதி மற்றும் தேவதர்சினி, ரவி பிரகாஷ் ஆகியோரும் குளத்தில் இருந்தனர். 

இதில் விஸ்வஜோதி எதிர்பாராத விதமாக நீரில் மூழ்கினார். மேலும் குளத்தில் இருந்தவர்கள் நீரில் மூழ்கும் நிலை ஏற்பட்டதை அறிந்த அதே பகுதியைச் சேர்ந்த பழனிவேல்ராஜ் மகன் 8ம் வகுப்பு படித்து வரும் சபரீஸ்வரன் (13) அங்கிருந்த படிக்கட்டில் அமர்ந்திருந்த நிலையில் உடனே குளத்தில் இறங்கி நீரில் மூழ்கிய விஸ்வஜோதி, தேவதர்ஷினி மற்றும் ரவி பிரகாஷ் ஆகியோரை மீட்க முயன்றார். ஆனாலும் விஸ்வ ஜோதி நீரில் மூழ்கி விட்டதால் தேவதர்சினி மற்றும் ரவி பிரகாஷ் ஆகிய இருவரையும் பிடித்து இழுத்து வந்து மீட்டுள்ளார். அதன் பிறகு தான் அனைவரும் சப்தம் போடவே அருகில் உள்ள அவரின் உறவினரின் உதவியுடன் விஸ்வஜோதியை மீட்டு மேலே கொண்டு வந்துள்ளனர். ஆனாலும் அவர் இறந்து விட்டார். 

பின்னர் சம்பவம் பற்றி தகவல் அறிந்த வையம்பட்டி போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று இறந்தவரின் உடலை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

இந்த சம்பவத்தில் சரியான நேரத்தில் சமயோசிதமாகச் செயல்பட்டு இரண்டு உயிர்களை காப்பாற்றிய 13 வயது சிறுவனின் துணிச்சலான செயல் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளதுடன் அனைவரும் பாராட்டி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.