சீமான் மீண்டும் ஆஜராக நீதிமன்றம் உத்தரவு!

நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் அக்டோபர் 10 ஆம் தேதி மீண்டும் ஆஜராக ஈரோடு மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Updated on
1 min read

நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் வரும் அக்டோபர் 10 ஆம் தேதி மீண்டும் ஆஜராக ஈரோடு மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் பட்டியலின சமுதாயத்தினர் குறித்து தவறாக பேசியதாக நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. 

இந்த வழக்கு விசாரணைக்காக, ஈரோடு மாவட்ட நீதிமன்றத்தில் நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று நேரில் ஆஜரானார். 

இந்த நிலையில், இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், சீமானை வரும் அக்.10 ஆம் தேதி மீண்டும் விசாரணைக்கு ஆஜராக ஈரோடு மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com