நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் வரும் அக்டோபர் 10 ஆம் தேதி மீண்டும் ஆஜராக ஈரோடு மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் பட்டியலின சமுதாயத்தினர் குறித்து தவறாக பேசியதாக நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கு விசாரணைக்காக, ஈரோடு மாவட்ட நீதிமன்றத்தில் நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று நேரில் ஆஜரானார்.
இதையும் படிக்க: கடந்த 4 ஆண்டுகளில் 100 மீட்டர் நிலத்தை இழந்த ஸ்ரீஹரிகோட்டா
இந்த நிலையில், இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், சீமானை வரும் அக்.10 ஆம் தேதி மீண்டும் விசாரணைக்கு ஆஜராக ஈரோடு மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.