பராமரிப்பு பணி காரணமாக செ.13-ல் 9 மின்சார ரயில்களின் சேவை முழுமையாக ரத்து செய்யப்படும் என தெற்கு ரயில்வேயின் சென்னை கோட்டம் அறிவித்துள்ளது.
இது குறித்து சென்னை ரயில்வே கோட்டம் சார்பில் தெரிவித்திருப்பதாவது:
சென்னை மூர் மார்க்கெட் - அரக்கோணம், சென்னை மூர் மார்க்கெட் - திருத்தணி செல்லக்கூடிய மின்சார ரயில்கள் முழுமையாக ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அரக்கோணம் - சென்னை மூர் மார்க்கெட், திருத்தணி - சென்னை மூர் மார்க்கெட் உள்ளிட்ட மின்சார ரயில்களும் முழுமையாக ரத்து செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க: மார்க் ஆண்டனி படத்திற்கான தடை நிறுத்திவைப்பு!
மூர் மார்க்கெட்டில் இருந்து திருப்பதி செல்லும் சிறப்பு மின்சார ரயில் பகுதியாக ரத்து செய்யப்பட்டுள்ளது.