பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!வாக்காளர் பட்டியலில் இப்போதுகூட பெயர் சேர்க்கலாம்! தலைமைத் தேர்தல் ஆணையர் தகவல்ஜெயலலிதா வாழ்நாள் முழுவதும் எதிர்த்த கட்சியில் ஓபிஎஸ்: தமிழிசை கடும் விமர்சனம்!தில்லி மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கு: கேஜரிவால், சிசோடியா விடுவிப்பு! எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்தார் ஓ. பன்னீர்செல்வம்! திமுகவில் இணைந்தார் ஓ. பன்னீர்செல்வம்!
/

சென்னை வேளச்சேரியில் பயங்கர தீ விபத்து!

சென்னை வேளச்சேரியில் புதிதாக கட்டப்பட்டு வரும் கட்டடத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

News image
Updated On :2 பிப்ரவரி 2024, 2:58 am

DIN

சென்னை வேளச்சேரியில் புதிதாக கட்டப்பட்டு வரும் கட்டடத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

கட்டடத்தில் பற்றிய தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இந்த தீ விபத்தால் அப்பகுதி முழுவதும் புகைமண்டலமாக காட்சியளிக்கிறது.

சென்னை வேளச்சேரி ரயில் நிலையம் அருகே உள்ள பிரதான சாலையில் புதிதாக கட்டப்பட்டு வரும் 9 மாடி கட்டடத்தில் ஏற்பட்ட இந்த தீ விபத்தால் வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் அச்சமடைந்தனர்.

அங்கு இருந்த கட்டுமான தொழிலாளர்கள் உடனடியாக வெளியேறியதால் உயிரிழப்பு தவிர்க்கப்பட்டது. மேலும், அப்பகுதியில் செல்லும் வாகனங்கள் மாற்று வழியில் செல்ல அறிவுறுத்தப்பட்டது. 

இந்த தீ விபத்து எப்படி ஏற்பட்டது என்பது குறித்த தகவல் வெளியாக நிலையில், காவல் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.