மேட்டூர் அணை நிலவரம்!

காவிரியின் நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்துவரும் மழையின்  காரணமாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 2844கன அடியாக அதிகரித்துள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்

காவிரியின் நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்துவரும் மழையின்  காரணமாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 2844கன அடியாக அதிகரித்துள்ளது.

இன்று காலை மேட்டூர் அணையின் நீர்மட்டம் 40.38அடியிலிருந்து 39.75அடியாக குறைந்தது. அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 2,556 கன அடியிலிருந்து வினாடிக்கு 2,844கன அடியாக அதிகரித்துள்ளது.

அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 6,500 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அணையின் நீர் இருப்பு 11.96 டிஎம்சியாக உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com