மத்திய கிழக்கில் பதற்றம்: சிபிஎஸ்இ தேர்வுகள் ரத்து!மேற்கு வங்க ஆளுநர் ராஜிநாமா! ஆர்.என். ரவி நியமனம்!இந்தியாவுக்கு எரிவாயு வழங்க ஆஸ்திரேலியா, கனடா முடிவு?தேர்தல் விதிமீறல்: ஓபிஎஸ் மீதான 4 வழக்குகள் ரத்து!ஈரானின் தலைவர் கமேனி கொலை! - இந்தியா இரங்கல்!ராணுவ மோதல் பிரச்னைக்குத் தீர்வு அல்ல: பிரதமர் மோடிஈரான் வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கர் உரையாடல்!சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்வு! ஐடி பங்குகள் மட்டும் சரிவு!
/

காஞ்சிபுரத்தில் பள்ளிகள் வழக்கம் போல் செயல்படும்: ஆட்சியர்

காஞ்சிபுரத்தில் பள்ளிகள் வழக்கம்போல் பள்ளிகள் செயல்படும் என்று மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மோகன் தெரிவித்துள்ளார்.

News image
கோப்புப்படம்
Updated On :21 செப்டம்பர் 2023, 3:04 am

DIN

காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் பள்ளிகள் வழக்கம்போல் பள்ளிகள் செயல்படும் என்று மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மோகன் தெரிவித்துள்ளார்.

சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், வேலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் அதிகாலை முதல் பரவலாக மழை பெய்து வருகின்றது. மேலும், நீலகிரி, கோவை உள்ளிட்ட 9 மாவட்டங்களுக்கு இன்று கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், தொடர் மழை காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுமா என்ற கேள்வி பெற்றோர்களிடையே எழுந்தது.

ஆனால், பள்ளிகளில் காலாண்டுத் தேர்வு நடைபெறுவதாலும், மிதமான மழையே பெய்து வருவதாலும் பள்ளிகள் வழக்கம் போல் செயல்படும் என்று காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

வேலூர் மாவட்டத்தை பொறுத்தவரை 1 முதல் 5-ஆம் வகுப்பு வரையிலான தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.