பிரிஜ் பூஷணைப் பாதுகாக்கும் அரசு இயந்திரம்! விரைவில் மேல்முறையீடு! வினேஷ் போகத் செங்கல்பட்டு உள்பட 8 மாவட்டங்களில் இன்று கனமழை!துரித வேகத்தில் சென்னை அண்ணா சாலை உயர்நிலை சாலை பணிகள்! நவம்பரில் திறக்கப்படுமா?பயன்படுத்தாத வங்கிக் கணக்கில் பணம் இருக்கிறதா? என்ன செய்யலாம்?ஆடிப் பெருக்கு! தாமிரபரணி நதிக்கு சீர்வரிசைகளுடன் சிறப்பு பூஜை!!மோடி அரசு, பணக்காரர்களுக்கான ஆட்சி! ரமணா பட பாணியில் புள்ளி விவரங்களுடன் மாணிக்கம் தாகூர் பேச்சு!திருப்பரங்குன்றம் வழக்கு: இடைக்கால உத்தரவு பிறப்பிக்க முடியாது! உச்ச நீதிமன்றம்காவிரி தீர்ப்பைக் கூட காப்பாற்ற முடியாத அரசுதான் தவெக: இபிஎஸ்மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் வழக்கு! பிரிஜ் பூஷண் விடுதலை!திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயனுக்கு நிபந்தனை ஜாமீன்!தீரன் சின்னமலையின் புகழ் என்றென்றும் நிலைத்திருக்கட்டும்! முதல்வர் விஜய்
/

வரும் மக்களவைத் தேர்தலில் பாஜக 400 தொகுதிகளுக்கு மேல் வெல்லும்: அண்ணாமலை பேட்டி

வரும் 2024 மக்களவைத் தேர்தலில் 400 இடங்களுக்கு மேல் பாஜக வெற்றி பெற்று பிரதமர் நரேந்திர மோடி மூன்றாவது முறையாக பிரதமராக அமருவார் என தமிழக பாஜக தலைவர் அண்ணாலை நம்பிக்கை தெரிவித்துள்ளார். 

News image
Updated On :2 பிப்ரவரி 2024, 8:32 am IST


கோவை: வரும் 2024 மக்களவைத் தேர்தலில் 400 இடங்களுக்கு மேல் பாஜக வெற்றி பெற்று பிரதமர் நரேந்திர மோடி மூன்றாவது முறையாக பிரதமராக அமருவார் என தமிழக பாஜக தலைவர் அண்ணாலை நம்பிக்கை தெரிவித்துள்ளார். 

தமிழகம் முழுவதும் ‘என் மண் என் மக்கள்’ என்ற நடைப்பயணத்தை தொடங்கி பாஜக மாநிலத் தலைவா் அண்ணாமலை மக்களைச் சந்தித்து வருகிறாா். அதன்படி, கோவை மாவட்டத்தில் தெற்கு சட்டப் பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட பகுதிகளில் நடைப்பயணம் மேற்கொண்டுள்ளார். 

இந்த நடைப்பயணத்தின் போது, வருகிற 2024 மக்களவைத் தோ்தலில் 400 தொகுதிகளுக்கு மேல் பாஜக வெற்றி பெற்று பிரதமர் நரேந்திர மோடி மூன்றாவது முறையாக பிரதமராக அமருவார். தமிழகத்தில் இருந்து 39 எம்.பி.க்களை பாஜக தேசிய ஜனநாயகக் கூட்டணி மூலம் மக்களவைக்கு கொண்டுச் செல்வோம். 

வரும் தேர்தலில் பாஜகவின் வெற்றியை தடுக்கும் பொய் பிரசாரங்கள் அவிழ்த்து விடப்படும். அதனை நாம் முறியடிக்க வேண்டும் என்றார்.

2014 ஆம் ஆண்டு உலக அளவில் 11 ஆவது இடத்தில் இருந்த நாட்டின் பொருளாதாரத்தை கடந்த 9 ஆண்டுகளில் 5 ஆவது இடத்திற்கு கொண்து வந்துள்ளார் பிரதமர் மோடி. 

சனாதன தர்மம் என்ன என்பது தெரியாமலேயே அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசி வருவதாக அண்ணாமலை தெரிவித்தார்.

நடிகர் கமலஹாசன் திறமையான நடிகர். ஆனால் தற்போது திமுகவில் சேருவதா அல்லது காங்கிரஸ் கட்சியில் சேருவதா என்ற குழப்பத்தில் இருந்து வருவதாக மேலும் அவர் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.