புதுக்கோட்டை அருகே காரும் தனியார் பேருந்தும் நேர் மோதி விபத்து: 3 பேர் பலி

புதுக்கோட்டை அருகே காரும் தனியார் பேருந்தும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 3 பேர் பலியாகினர். 
பேருந்துக்கு அடியில் சிக்கி உள்ள காரை பேருந்தை சாய்த்து காரில் இருந்தவர்கள் மீட்டனர்.
பேருந்துக்கு அடியில் சிக்கி உள்ள காரை பேருந்தை சாய்த்து காரில் இருந்தவர்கள் மீட்டனர்.
Published on
Updated on
1 min read



புதுக்கோட்டை: புதுக்கோட்டை அருகே காரும் தனியார் பேருந்தும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 3 பேர் பலியாகினர். 

புதுக்கோட்டை அடுத்த நமணசமுத்திரம் காவல் நிலையம் அருகே திருச்சி-ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த காரும் மதுரையில் இருந்து புதுக்கோட்டை நோக்கி சென்று கொண்டிருந்த தனியார் பேருந்தும் வெள்ளிக்கிழமை   நேருக்கு நேர் மோதிய விபத்துக்குள்ளானது. இதில், காரில் சென்ற 5 பேரில் 2 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். விபத்தில் படுகாயமடைந்த 2 சிறுவர்கள் உள்பட 3 பேரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்தில் காயம் அடைந்து மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட ராஜேஸ்வரி என்ற பெண்மணியும் உயிரிழந்த நிலையில் பலி எண்ணிக்கை மூன்றாக உயர்ந்துள்ளது.

பேருந்துக்கு அடியில் சிக்கி உள்ள காரை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ள அந்த பகுதி மக்கள்.  

விபத்தில் இறந்தவர்களின் உடல்களை போலீசார் மீட்டு புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்தால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com