உதயநிதியை இன்றே விடுவிக்க வேண்டும்! சென்னை உயர் நீதிமன்றம்!எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி கைது நடவடிக்கையில் சந்தேகம்: எடப்பாடி பழனிசாமிஉதயநிதியை அவசரமாக கைது செய்தது ஏன்? அன்புமணி கண்டனம்!உதயநிதி கைது! தமிழ்நாடு முழுவதும் திமுக போராட்டம்!உதயநிதி கைது: தேனியில் சாலை மறியலில் ஈடுபட்ட ஓபிஎஸ் கைது!எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி கைது! தஞ்சை அழைத்துச் செல்லப்படுகிறார்எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி கைது!உதயநிதியை அழைத்துச் செல்லும் வாகனத்தை மறித்து திமுகவினர் போராட்டம்!உதயநிதி விவகாரம்: சென்னை உயர்நீதிமன்றத்தில் அவசர முறையீடு!
/

மாணவிகளிடம் மசாஜ் செய்த தலைமை ஆசிரியர் போக்சோவில் கைது; பணியிடை நீக்கம்

மேட்டூர் அருகே மாணவிகளிடம் மசாஜ் செய்த தலைமை ஆசிரியர் போக்சோ சட்டத்தின் கீழ் வெள்ளிக்கிழை கைது செய்யப்பட்டு பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

News image

போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ள தலைமை ஆசிரியர் ராஜா

Updated On :2 பிப்ரவரி 2024, 5:18 pm IST

சேலம்: மேட்டூர் அருகே மாணவிகளிடம் மசாஜ் செய்த தலைமை ஆசிரியர் போக்சோ சட்டத்தின் கீழ் வெள்ளிக்கிழை கைது செய்யப்பட்டு பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

மேட்டூர் அருகே உள்ள கருங்கல்லூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியராக பணியாற்றியவர் ராஜா(52). பள்ளியில் ஐந்தாம் வகுப்பு படிக்கும் மாணவியரை தனது அறைக்கு அழைத்து கை, கால்களை அமுக்கி விட வைத்தும் மசாஜ் செய்யவைத்தும் பல்வேறு தொல்லைகள் கொடுத்தும் வந்துள்ளார்.

Story image

பள்ளியை முற்றுகையிட்டுள்ள பெற்றோர்கள்

இது தொடர்பாக தகவல் அறிந்த பெற்றோர்கள் பள்ளியை முற்றுகையிட்டு சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
 
பொதுமக்கள் தலைமை ஆசிரியரை கற்களாலும், செருப்பாலும் தாக்க முயற்சித்தனர். சிலர் அவர் மீது செருப்பை வீசினார்கள். இதனால் போலீசார் தலைமை ஆசிரியரை ஒரு அறையில் வைத்து தற்காத்தனர்.

Story image

சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பொதுமக்கள்.

கூடுதலாக போலீசார் வரவழைக்கப்பட்டு பாதுகாப்புடன் மேட்டூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

பாதிப்புக்குள்ளான சிறுமியர் மற்றும் ஆசிரியர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வாக்குமூலம் பெற்றனர். பின்னர் தலைமை ஆசிரியர் போக்சோ சட்டத்தின் கீழ் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டா. 

முன்னதாக, அவரை கல்வித் துறை அதிகாரிகள் பணியிடை  நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.