சென்னை: வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டரின் (எல்பிஜி) விலையை ரூ.200 குறைப்பதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கிய நிலையில், இன்று அமலுக்கு வந்தது.
கரோனா தொற்று பரவல், உக்ரைன்-ரஷியா போா் ஆகியவற்றின் காரணமாக சமையல் எரிவாயு சிலிண்டா் விலை அதிகரித்தது.
இந்நிலையில், மத்திய அமைச்சரவைக் கூட்டம் தில்லியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. அதில், வீட்டு உபயோக எல்பிஜி விலையை ரூ.200 குறைப்பதற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.
இதனைத் தொடர்ந்து, சென்னையில் 14.2 கிலோ எடையுள்ள வீட்டு உபயோக சிலிண்டர் ரூ.1,118-க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், ரூ.200 குறைந்து ரூ.918-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
தெலங்கானா, ராஜஸ்தான், மத்திய பிரதேசம் உள்ளிட்ட 5 மாநிலங்களில் பேரவைத் தோ்தல்களும் அடுத்த ஆண்டில் மக்களவைத் தோ்தலும் நடைபெறவுள்ள நிலையில் மத்திய அரசு இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.