பேரவையில் கடந்த காலத்தைப்பற்றியே விஜய் பேசுவது ஏன்? அன்புமணி கேள்விஉருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி! செப். 19 முதல் மழைக்கு வாய்ப்பு!பிலிகுண்டுலுவுக்கு 14 ஆயிரம் கன அடியாக நீர்வரத்து அதிகரிப்புஅக்டோபர் 11-ல் முதல்வர் விஜய்யின் வாழ்க்கை வரலாற்றுப் புத்தகத்தை வெளியிடுகிறேன் - மதுரை ஆதீனம் நவோதயா பள்ளிகளுக்கு இடங்கள் தேர்வு செய்ய தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!2027-ஆம் ஆண்டுக்கான சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்புத் தேர்வு அட்டவணை! மாணவர் பாரதிதாசன் கண்ணீர் விடியோ! சமூக நீதி நாளில் இப்படி ஒரு அநீதி - உதயநிதி

சமையல் எரிவாயு சிலிண்டா் விலை குறைப்பு அமல்!

வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டரின் (எல்பிஜி) விலையை ரூ.200 குறைப்பதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கிய நிலையில், இன்று அமலுக்கு வந்தது.

கோப்புப்படம்

Published On :

சென்னை: வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டரின் (எல்பிஜி) விலையை ரூ.200 குறைப்பதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கிய நிலையில், இன்று அமலுக்கு வந்தது.

கரோனா தொற்று பரவல், உக்ரைன்-ரஷியா போா் ஆகியவற்றின் காரணமாக சமையல் எரிவாயு சிலிண்டா் விலை அதிகரித்தது.

இந்நிலையில், மத்திய அமைச்சரவைக் கூட்டம் தில்லியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. அதில், வீட்டு உபயோக எல்பிஜி விலையை ரூ.200 குறைப்பதற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.

இதனைத் தொடர்ந்து, சென்னையில் 14.2 கிலோ எடையுள்ள வீட்டு உபயோக சிலிண்டர் ரூ.1,118-க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், ரூ.200 குறைந்து ரூ.918-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

தெலங்கானா, ராஜஸ்தான், மத்திய பிரதேசம் உள்ளிட்ட 5 மாநிலங்களில் பேரவைத் தோ்தல்களும் அடுத்த ஆண்டில் மக்களவைத் தோ்தலும் நடைபெறவுள்ள நிலையில் மத்திய அரசு இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.