திமுக இளைஞரணி மாநாடு டிச.24-க்கு ஒத்திவைப்பு!

சேலத்தில் நடைபெறவிருந்த திமுக இளைஞரணி 2வது மாநில மாநாடு டிசம்பர் 24-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on
Updated on
1 min read


சேலத்தில் நடைபெறவிருந்த திமுக இளைஞரணி 2வது மாநில மாநாடு டிசம்பர் 24-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 

இதுதொடர்பாக வெளியிட்ட அறிக்கையில், 

2007-ம் ஆண்டு டிசம்பர் 15 அன்று கழக வரலாற்றில் முத்திரைப் பதித்து, திருப்புமுனை ஏற்படுத்திய திமுக இளைஞர் அணி முதல் மாநில மாநாட்டினை தொடர்ந்து, 

வருகிற டிசம்பர் 17, 2023 (ஞாயிற்றுக்கிழமை) அன்று திமுக இளைஞர் அணி இரண்டாவது மாநில மாநாடு சேலத்தில் நடைபெறவிருந்த நிலையில், மழை காரணமாக ஒரு வாரக் காலத்திற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 

திமுக இளைஞரணி 2வது மாநில மாநாடு டிசம்பர் 24-ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

திமுக இளைஞரணி மாநாட்டில் சுமார் 10 லட்சம் பேர் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com