உதகை-மேட்டுப்பாளையம் இடையேயான மலை ரயில் சேவை டிசம்பர் 13 ஆம் தேதி வரை ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக மலை ரயில் தண்டவாளத்தில் மண் சரிவு ஏற்பட்டதுடன் பாறைகள், மரங்களும் விழுந்தன. இதனால் சீரமைப்பு பணிகளுக்காக உதகை-மேட்டுப்பாளையம் இடையேயான மலை ரயில் சேவை டிசம்பர் 8 முதல் 10 ஆம் தேதி வரை ரத்து செய்யப்பட்டிருந்தது.
இந்த நிலையில் வரும் 13 ஆம் தேதி வரை மலை ரயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.