சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட திமுக சார்பில் 15,300-க்கும் மேற்பட்டோர் விண்ணப்பம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் விரைவில் நேர்காணல்அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலினுடன் இந்திய கம்யூ. தலைவர்கள் தொகுதிப்பங்கீட்டுப் பேச்சுஈரான் மீது இன்று மிகக் கடுமையான தாக்குதல்: டிரம்ப் எச்சரிக்கை!பிகாரில் நிதீஷ்குமாருக்கு நடந்தது தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு நடக்கும்! - முதல்வர் மு. க. ஸ்டாலின்கடந்த 5 ஆண்டுகளில் ஏழைகளுக்காக 4.29 லட்சம் வீடுகள்: தமிழக அரசுகோவை கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகள் 3 பேருக்கும் வாழ்நாள் சிறை!துபை விமான நிலையத்தில் ஈரான் ட்ரோன் தாக்குதல்: விமான சேவை பாதிப்பு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!கேரள மாநில அரசு வேலை வாய்ப்பில் திருநங்கைகளுக்கு 1% இடஒதுக்கீடு!உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலில் 9 பேர் பலி!அன்னாபெல் சதர்லேண்ட் சதம்..! ஆஸி. மகளிர் 123 ரன்கள் முன்னிலை!தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்
/

புதிய கரோனா தொற்றால் மிதமான பாதிப்புதான்: அமைச்சர் மா. சுப்பிரமணியன் பேட்டி

சிங்கப்பூரில் மற்றும் கேரளத்தில் கண்டறியப்பட்டுள்ள புதிய கரோனா பாதிப்பு மிதமான பாதிப்பாகவே இருக்கிறது என்று அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். 

News image
அமைச்சர் மா. சுப்பிரமணியன்
Updated On :16 டிசம்பர் 2023, 9:00 am

DIN

சிங்கப்பூரில் மற்றும் கேரளத்தில் கண்டறியப்பட்டுள்ள புதிய கரோனா பாதிப்பு மிதமான பாதிப்பாகவே இருக்கிறது என்று அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். 

சென்னையில் வேளச்சேரியில் மழைக்கால மருத்துவ முகாமை தொடங்கிவைத்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், 'கரோனா தொற்றுக்கு எதிராக நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் பொருட்டு தமிழகத்தில் 98%-க்கும் அதிகமானோருக்கு 3 தவணை கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. கரோனாவின் உருமாற்றம் பல வகைகளில் தொடர்ந்துகொண்டு இருக்கிறது. 

சிங்கப்பூரில் பலருக்கு உருமாறிய கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. சிங்கப்பூரில் மருத்துவ பல்கலைக்கழகத்தை தொடர்புகொண்டு கேட்டபோது, 'இதனால் பாதித்தவர்கள் ஒரு சில நாள்களில் சரியாகிவிடுகிறார்கள். இருமல், சளி மட்டுமே அறிகுறிகளாக உள்ளது' என்று கூறினார்கள்.

கேரளத்தில் நேற்று 280 பேருக்கு கரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அங்குள்ள சுதாரத்துறையினருடனும் பேசி வருகிறோம். இந்த கரோனா பாதிப்பு மிதமான பாதிப்பாகவே இருக்கிறது. 3-4 நாட்களில் சரியாகிவிடுகிறது. 

தமிழகத்தில் தொடர்ந்து இது தொடர்பாக கண்காணித்து வருகிறோம். காய்ச்சல் அதிகம் இருப்பவர்களுக்கு ஆர்டிபிசிஆர் பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. பரிசோதனைகள் அதிகரிக்கப்பட்டுள்ளது. மேலும் மாதிரிகள் பகுப்பாய்வு செய்து எந்தமாதிரியான வகை என்று கண்டறிய அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கைகளே போதுமானதாக இருக்கிறது. 

தமிழகத்தில் 3 ஆயிரம் இடங்களில் 8- வது மருத்துவ முகாம்கள் நடைபெற்று வருகின்றன. கடந்த 7 வாரங்களில் இதுவரை 16,516 மருத்துவ முகாம்கள் நடைபெற்றுள்ளன. அனைத்து முகாம்களில் 9 மாதம் முதல் 15 வயதுடைய சிறார்களுக்கு ரூபெல்லா தடுப்பூசி போடும் பணி தொடங்கப்பட்டுள்ளது. மருத்துவ முகாம்கள் மூலம் 7.83 லட்சம் பேர் பயன் பெற்றுள்ளனர்' என்றார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.