நெல்லை மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு நாளை (டிச.20) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு நாளை (டிச.20) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

நாளை நடைபெறவிருந்த தேர்வுகளும் ஒத்திவைக்கப்படுவதாக நெல்லை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு விடுத்துள்ளார்.

திருநெல்வேலி மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை முதல் 15 மணி நேரத்திற்கு மேலாக தொடா் மழை கொட்டித் தீா்த்தது. இதனால் பாளையங்கோட்டை, திருநெல்வேலி நகரம் உள்ளிட்ட பல இடங்களில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.

இப்பகுதிகளில் வெள்ள பாதிப்பு தொடர்வதால் இம்மாட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, தூத்துக்குடி மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com