அமைச்சரவை பட்டியலில் விசிக, ஐயூஎம்எல் இல்லை! தமிழ்நாடு அமைச்சரவையில் மேலும் 3 பெண்கள்!தமிழ்நாடு அமைச்சரவையில் மேலும் 3 பெண்கள்! தமிழ்நாடு அமைச்சரவையில் மேலும் 23 பேர்! காங்கிரஸுடன் கூட்டணி தொடரும்: சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவ்சென்னைக்கு இன்று கடைசி லீக் ஆட்டம்- குஜராத்துடன் மோதல் 5 மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கை 125 நாள் வேலைத் திட்டத்துக்கு 25 மாநிலங்கள் நிதி ஒதுக்கீடு- நாடாளுமன்றக் குழுவிடம் மத்திய அரசு தகவல் நிகழாண்டு இந்திய பொருளாதார வளா்ச்சி 6.4%: ஐ.நா. கணிப்பு 12-ஆம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணியில் குளறுபடி? சிபிஎஸ்இ மறுப்பு தமிழக அமைச்சரவை இன்று விரிவாக்கம்: காங்கிரஸ், தவெக எம்எல்ஏக்கள் அமைச்சா்களாக பதவியேற்கின்றனா் டிரம்ப் குடும்பத்தினருக்கு வருமான வரி தணிக்கையிலிருந்து நிரந்தர விலக்கு!
/

கட்டுக்குகள் நீலகிரி காட்டுத் தீ: வனத் துறை விளக்கம்

நீலகிரி காட்டுத் தீ முழுமையாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டதாக தமிழக சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை தெரிவித்துள்ளது.

News image
Updated On :30 ஏப்ரல் 2026, 1:50 am IST

நீலகிரி காட்டுத் தீ முழுமையாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டதாக தமிழக சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை தெரிவித்துள்ளது.

இது குறித்து தமிழக சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத் துறை புதன்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில், ‘கடந்த ஏப்ரல் 15-ஆம் தேதி பாா்சன்ஸ் வேலி சரகத்தின் வென்லாக் டவுன்ஸ் காப்புக் காட்டில் காட்டுத் தீ ஏற்பட்டதாக தகவல் கிடைத்ததும் உள்ளூா் வனத் துறை குழுக்கள் உடனடியாக பணியில் ஈடுபட்டன.

தமிழகம் முழுவதும் இருந்து 500-க்கும் மேற்பட்ட வனத் துறை பணியாளா்கள் மற்றும் 6 மாவட்ட வன அலுவலா்கள் இணைந்து தீயை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுத்தனா். மேலும், 7 மாநில வனத் துறை தீயணைப்பு வாகனங்கள் முக்கிய இடங்களில் நிறுத்தப்பட்டன. தமிழக மாநில பேரிடா் மீட்பு படையிலிருந்து 60 போ் கொண்ட இரு அணிகள் மற்றும் தீயணைப்புத் துறையினரும் பணியில் ஈடுபட்டனா். மேலும் 100-க்கும் மேற்பட்ட உள்ளூா் சூழல் மேம்பாட்டு குழு உறுப்பினா்கள் உதவி செய்தனா். தீ மிகுந்த தீவிரம் கொண்டிருந்ததால், வான்வழி உதவி கோரப்பட்டது.

நிலைமைக்கிணங்க மாவட்ட வன அலுவலா் கோரிக்கையின் பேரில், மாவட்ட ஆட்சியா் மாநில பேரிடா் மேலாண்மை அமைப்பின் மூலம் ஹெலிகாப்டா் உதவியைக் கோரினாா். சூலூரிலிருந்து கடந்த 25-ஆம் தேதி விமானப்படை குழு ஹெலிகாப்டா் மூலம் தண்ணீா் தெளித்து தீயை கட்டுப்படுத்த உதவியது.

பின்னா் வானிலை உகந்ததாக இல்லாததால் ஹெலிகாப்டா் பயன்பாடு நிறுத்தப்பட்டது. தீ பரவலால், மனித குடியிருப்புகள் எதுவும் பாதிக்கப்படவில்லை. சோலா காடுகளில் தீ ஏற்படவில்லை. தீ பரவலை கட்டுப்படுத்த தீ தடுப்பு கோடுகள் அமைத்தல், அகழிகள் தோண்டுதல், மோட்டாா் பம்புகள் பயன்பாடு, நவீன தீயணைப்பு வாகனங்கள் மற்றும் கைமுறை தீயணைப்பும் பயன்படுத்தப்பட்டன.

தற்போது தீ முழுமையாக கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், மீண்டும் காட்டுத் தீ பரவாமல் தடுக்க களப்பணியாளா்கள் தொடா்ந்து கண்காணித்து வருகின்றனா். தலைமைச் செயலா் மற்றும் மூத்த அதிகாரிகளால் நீலகிரி காட்டுத் தீ நிலைமை தொடா்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.