தாய் மொழியுடன் மற்றொரு மொழியைக் கற்க வேண்டும்: அமித் ஷாதமிழ்நாட்டில் மின்சாதன உற்பத்தித் துறை வளர்ச்சிக்கு ரூ. 300 கோடி முதலீடு!எந்தவொரு துண்டுச் சீட்டுக்கும் அடிபணிய மாட்டேன்: சட்டப் பேரவைத் தலைவர் ஜே.சி.டி. பிரபாகர்நடிகர் விஜய் சேதுபதிக்கு துணை நிற்போம் - அதிமுக எம்.பி. இன்பதுரைதிறன் மையங்களை விரிவுபடுத்த 2 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்து! தமிழக அரசுரூ.11,000 கோடியில் முதலீடு: முதல்வர் விஜய் முன்னிலையில் லண்டனில் ஒப்பந்தம்!16 மாவட்டங்களில் இன்று பலத்த காற்றுடன் கனமழைக்கு வாய்ப்பு!

விஜயகாந்த் உடலைக் கண்டு அழுத விஜய்: நேரில் சென்று அஞ்சலி!

விஜயகாந்த் உடல் கண்ணாடிப் பெட்டியில் கிடத்தப்பட்டிருந்ததைக் கண்டு, நடிகர் விஜய் இரண்டு நிமிடங்கள் உடைந்து அழுதார்.

Published On :

மறைந்த நடிகர் விஜயகாந்த் உடலுக்கு நடிகர் விஜய் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். 

சென்னை கோயம்பேட்டிலுள்ள தேமுதிக அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த விஜயகாந்த் உடலுக்கு அஞ்சலி செலுத்தி, அவரின் குடும்பத்தாருக்கு நடிகர் விஜய் ஆறுதல் கூறினர். 

விஜயகாந்த் உடல் கண்ணாடிப் பெட்டியில் கிடத்தப்பட்டிருந்ததைக் கண்டு, நடிகர் விஜய் இரண்டு நிமிடங்கள் உடைந்து அழுதார். விஜயகாந்த் மகன்களுக்கு ஆறுதல் கூறினார். 

விஜய்யின் தந்தையும், இயக்குநருமான எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கிய முக்கிய திரைப்படங்களில் விஜயகாந்த் நடித்துள்ளார். விஜயகாந்த்தை வைத்து அதிக திரைப்படங்கள் இயக்கிய இயக்குநர்களில் ஒருவர் நடிகர் விஜய்யின் தந்தை எஸ்.ஏ. சந்திரசேகர். மேலும், நடிகர் விஜய்யுடன் இணைந்து திரைப்படங்களிலும் விஜயகாந்த் நடித்துள்ளார்.  

விஜயகாந்த் உடலுக்கு பொதுமக்கள் நள்ளிரவிலும் நீண்ட வரிசையில் காத்திருந்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர். 

விஜயகாந்தின் உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக வெள்ளிக்கிழமை காலை 6 மணியில் இருந்து மதியம் 1 மணி வரை சென்னை தீவுத்திடலில் வைக்கப்படவுள்ளது.

பிற்பகல் தீவுத்திடலிலிருந்து புறப்பட்டு, இறுதிச் சடங்கானது 4.45 மணியளவில் தேமுதிக தலைமை கழக வளாகத்தில் நல்லடக்கம் செய்யப்படுகிறது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.