தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,600 உயர்வு! வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்ந்தது!பனையூரில் தவெக வேட்பாளர்களுடன் விஜய் சந்திப்பு!பனையூரில் தவெக வேட்பாளர்களுடன் விஜய் சந்திப்பு! புதுச்சேரி சிறுமி பாலியல் கொலை வழக்கில் தீர்ப்பு! மே 1: ஞாயிறு அட்டவணைப்படி மெட்ரோ ரயில் இயக்கம்!சென்னையில் வாக்கு எண்ணிக்கை பணியில் ஈடுபடுவோருக்கு பயிற்சி முகாம்!விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கை விசாரித்த நீதிபதி பணியிட மாற்றம்!
/

லாரி மீது கார் மோதியதில் 5 பெண்கள் பலி; குழந்தை உள்பட 2 பேர் காயம்

நாமக்கல் மாவட்டம், பரமத்திவேலூர் தேசிய நெடுஞ்சாலையில் நின்று கொண்டிருந்த கண்டெய்னர் லாரி மீது கார் மோதிய விபத்தில் 4 பெண்கள் நிகழ்விடத்திலேயே பலியாகியுள்ளனர்.

News image
Updated On :28 பிப்ரவரி 2023, 3:54 am

நாமக்கல் மாவட்டம், பரமத்திவேலூர் தேசிய நெடுஞ்சாலையில் நின்று கொண்டிருந்த கண்டெய்னர் லாரி மீது கார் மோதிய விபத்தில் 4 பெண்கள் நிகழ்விடத்திலேயே பலியாகியுள்ளனர்.

கண்டெய்னர் லாரி மீது கார் மோதிய விபத்தில் திருச்செங்கோடு மோர்பாளையம் பகுதியைச் சேர்ந்த மகாலட்சுமி, கந்தாயி, குஞ்சம்மாள், கவிதா ஆகிய நான்கு பெண்கள் நிகழ்விடத்திலும், சாந்தி, காரை ஓட்டி வந்த ரவி மற்றும் 4 வயது குழந்தை லஷ்சனா ஆகிய மூன்று பேரும் நாமக்கல் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர். 

ஆனால் அங்கு சிகிச்சைப் பலனின்றி சாந்தி உயிரிழந்தார். காரை ஓட்டி வந்த சென்னை தாம்பரம் பகுதியைச் சேர்ந்த ரவி மற்றும் குழந்தை லஷ்சனா ஆகிய இருவரும் தீவிர சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.