டி20 உலக கோப்பையில் இங்கிலாந்து த்ரில் வெற்றி..! கேஜரிவால் விடுதலையை எதிர்த்து தில்லி உயர்நீதிமன்றத்தில் சிபிஐ மேல்முறையீடு!தமிழக வரலாற்றில் ஒரு கூட்டணி நீண்ட காலமாக வெற்றிகரமாகத் தொடருவது இதுவே முதல்முறை - முதல்வர் ஸ்டாலின் சென்னை மெட்ரோ ரயில் பணி: கலங்கரை விளக்கம் முதல் திருமயிலை வரை சுரங்கம் தோண்டும் பணி நிறைவுஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ள 12 பேரின் ஜாமீன் ரத்து மலையாள நடிகர் திலீப் விடுதலையை எதிர்த்து கேரள அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு!அதிமுகவில் மீண்டும் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்இஸ்ரேலில் இருந்து வெளியேற அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல்!கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

கும்பகோணம் சாரங்கபாணி சுவாமி கோயிலில் பொங்கல் தேரோட்டம்!

சாரங்கபாணி பெருமாள் ஸ்ரீதேவி மற்றும் பூமிதேவி தாயாருடன் தேரில் எழுந்தருள, தை பொங்கல் தேரோட்டம் நடைபெற்றது.

News image
Updated On :1 பிப்ரவரி 2024, 6:43 pm

DIN


தஞ்சாவூர்: 108 வைணவ திருத்தலங்களில் ஸ்ரீரங்கம், திருப்பதிக்கு அடுத்து 3 ஆவது தலமாகமாகவும், பூலோக வைகுண்டமாகவும் போற்றப்படும் சாரங்கபாணி சுவாமி திருக்கோயிலின் பொங்கல் தேரோட்டம் வெகுமிமர்சையாக நடைபெற்று வருகிறது. இதில், ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தேரினை வடம் பிடித்து இழுத்தனர். 

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருள்மிகு சாரங்கபாணி சுவாமி திருக்கோயில் 108 திவிய தேசங்களில் ஒன்றானது. ஸ்ரீரங்கம், திருப்பதி திவ்ய தேசங்களுக்கு அடுத்ததாக ஏழு ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பட்ட மூன்றாவது திவ்ய தேசமாக போற்றப்படுகிறது.

இக்கோயிலில் சங்கரமண பிரமோற்சவம்  (எ) தை பொங்கல் தேரோட்டத் திருவிழா கடந்த 7 ஆம் தேதி திங்கள்கிழமை  கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினமும் பல்வேறு வாகனங்களில் சாமி வீதி உலா நடைபெற்றது.

9 ஆம் நாளான இன்று ஞாயிற்றுக்கிழமை தை பொங்கலை முன்னிட்டு  உற்சவர் சாரங்கபாணி பெருமாள், ஸ்ரீதேவி, பூமிதேவி தாயாருடன் சமேதராய் சிறப்பு அலங்காரத்தில் திருத்தேரில் எழுந்தருள, தை பொங்கல் திருதேரோட்டம் சிறப்பாக நடைபெற்றது. 

அதிகாலையே ஏராளமான பக்தர்கள் தேரை வடம் பிடித்து சாரங்கா சாரங்கா என்று தேரை இழுக்க தேரோட்டம் வெகுவிமர்சையாக நடைபெற்று வருகிறது. 

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் சாரங்கபாணிசுவாமி திருக்கோயிலில் சங்கரமண பிரமோற்சவம்  (எ) தைப்பொங்கல் தேரோட்டத்திருவிழா கடந்த 7 ஆம் தேதி திங்கள்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. நாளும் பல்வேறு வாகனங்களில் சாமி வீதி உலா நடைபெற்றது. 9 ஆம் நாளான ஞாயிற்றுக்கிழமை தைப்பொங்கலை முன்னிட்டு உற்சவர் பெருமாள் ஸ்ரீதேவி பூமிதேவி தாயார் சமேதராய் தேரில் எழுந்தருள, தை பொங்கல் தேரோட்டம் சிறப்பாக நடைபெற்றது.

அதிகாலையில் நடைபெற்ற தேரோட்டத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து சாரங்கா சாரங்கா என்று தேரை இழுத்து வந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.