மருத்துவரின் மருந்து சீட்டு இல்லாமல் இருமல் மருந்து விற்கத் தடை!நடிகர் ரஜினியுடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு! ரூ. 75,000 வரை பயிர்க்கடன் முழுவதும் தள்ளுபடி! - முதல்வர் விஜய்நீட் மறுதேர்வை முன்னிட்டு டெலிகிராம் செயலிக்கு தடை! மத்திய அரசுநீட் மறுதேர்வை முன்னிட்டு டெலிகிராம் செயலிக்கு தடை! மத்திய அரசு வெள்ளை அறிக்கை இன்று மாலை வெளியீடு!கேரளத்தில் ஷிகெல்லா பாக்டீரியாவுக்கு சிறுவன் உயிரிழப்புலெபனான் ஆக்கிரமிப்பில் இருந்து பின்வாங்க மாட்டோம்: இஸ்ரேல்உக்ரைனில் ரஷியா பயங்கர வான்வழித் தாக்குதல்நீட் மறுதோ்வு வினாத்தாள் விற்பனை செய்வதாக விளம்பரம்: ராஜஸ்தானை சோ்ந்த இருவா் கைதுதிருப்பதி - புதுச்சேரி ‘மெமு’ ரயில் 24, 27-இல் விழுப்புரத்துடன் நிறுத்தம்
/

ஈரோடு தேர்தலில் அதிமுக கூட்டணி வேட்பாளர் யார்? - ஓரிரு நாளில் அறிவிப்பு!

ஈரோடு கிழக்கு தொகுதி வேட்பாளர் யார் என்பது குறித்து ஓரிரு நாட்களில் அறிவிக்கப்படும் என்று அதிமுக கூட்டணி சார்பில் தமாகா தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்தார். 

News image
Updated On :19 ஜனவரி 2023, 12:42 pm IST

ஈரோடு கிழக்கு தொகுதி வேட்பாளர் யார் என்பது குறித்து ஓரிரு நாட்களில் அறிவிக்கப்படும் என்று அதிமுக கூட்டணி சார்பில் தமாகா தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்தார். 

ஈரோடு கிழக்கு தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் திருமகன் ஈவெரா மறைவையடுத்து இத்தொகுதிக்கு நேற்று(புதன்கிழமை) இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டு தேர்தல் நடத்தை விதிமுறைகளும் உடனடியாக அமலுக்கு வந்தன. அதன்படி இத்தொகுதியில், ஜனவரி 31 ஆம் தேதி வேட்புமனு தாக்கல், பிப்ரவரி 27 ஆம் தேதி வாக்குப் பதிவு, மாா்ச் 2 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

முன்னதாக, 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப் பேரவைத் தோ்தலில் அதிமுக கூட்டணி சார்பில் தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் யுவராஜா இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்ட நிலையில், ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் தொடர்பாக தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசனை அதிமுக நிர்வாகிகள் குழு இன்று சந்தித்து பேசியது. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், வளர்மதி, கோகுல இந்திரா உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள் ஜி.கே.வாசனை சந்தித்துப் பேசினர். 

இதன்பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஜி.கே.வாசன், 'தற்போதைய சூழ்நிலையில் இடைத்தேர்தல் என்பது முக்கியத்துவம் வாய்ந்தது. இடைத்தேர்தலில் வெற்றியை உறுதி செய்துகொள்வது கூட்டணிக் கட்சிகளின் கடமை. நல்ல வியூகத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக இன்றைய ஆலோசனை நடைபெற்றது. அதிமுக நிர்வாகிகள் த.மா.கா. அலுவலகத்திற்கு வந்தது வரவேற்கத்தக்கது.அதிமுக - த.மா.கா. கட்சி இடையே சுமூக உறவு இருந்து வருகிறது. எங்களது இலக்கு தேர்தலில் கூட்டணி கட்சி வெற்றி பெற வேண்டும் என்பதே.இரு நாள்களுக்கு முன்னர் எடப்பாடி பழனிசாமியை தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசினேன்.

ஈரோடு கிழக்கு தொகுதி வேட்பாளர் யார் என்பது குறித்து ஓரிரு நாட்களில் அறிவிக்கப்படும். வாக்குறுதிகளை நிறைவேற்றாத அரசாக திமுக அரசு உள்ளது. எனவே திமுகவுக்கு எதிர்மறை வாக்குகள் அதிகரித்து வருகின்றன. நாங்கள் ஆலோசித்து  ஈரோடு கிழக்கு தொகுதி வேட்பாளரை அறிவிப்போம். தேர்தலில் நிச்சயம் வெற்றி பெறுவோம்' என்று கூறினார்.

முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறுகையில், கூட்டணி கட்சிகள் இணைந்து வேட்பாளரை முடிவு செய்தபின்னர் சின்னம் குறித்து முடிவெடுக்கப்படும் என்றார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.