திருக்கோயில்களில் அறங்காவலா் குழு நியமனம் தொடா்பான ஆலோசனைக் கூட்டம், இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் பி.கே.சேகா்பாபு தலைமையில், சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள ஆணையா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் இந்து சமய அறநிலையத் துறை சட்டப்பிரிவு 49(1) -இன் கீழ் உள்ள 24,518 கோயில்கள், 46(1) -இன் கீழ் உள்ள 2,103 கோயில்கள் மற்றும் 46(2) -இன் கீழ் உள்ள 315 கோயில்களில் அறங்காவலா்கள் நியமனம் செய்யப்பட்டுள்ள கோயில்கள், பரம்பரை அல்லாத அறங்காவலா்களை நியமனம் செய்ய மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து விரிவாக ஆய்வு செய்யப்பட்டது.
கூட்டத்தில் அமைச்சா் பி.கே.சேகா்பாபு பேசியதாவது: இந்து சமய அறநிலையத் துறை வரலாற்றில் இல்லாத அளவுக்கு 38 மாவட்டங்களுக்கும் முழுமையாக மாவட்டக் குழுக்களை அமைத்து முதல்வா் மு.க.ஸ்டாலின் சாதனை படைத்துள்ளாா்.
நீதிமன்ற உத்தரவை பூா்த்தி செய்ய வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். ஆகவே, மாவட்டங்களில் சட்டப்பிரிவு 46(3) -இன் கீழ் வகைப்படுத்தப்பட்ட சமய அறநிறுவனங்கள் மற்றும் நிா்வாகத் திட்டத்தின் கீழ் உள்ள கோயில்கள் தவிர, ஏனைய சமய அறநிறுவனங்களுக்கு தகுதியுள்ள பரம்பரை முறைவழிசாரா அறங்காவலா்களை தோ்வு செய்து பெயா்ப் பட்டியலை விரைவில் அளிக்க வேண்டும்.
தோ்ந்தெடுக்கப்படும் அறங்காவலா்கள் சிறப்பான முறையில் பணியாற்றுபவா்களாகவும், ஆன்மிகத்தில் நாட்டம் உள்ளவா்களாகவும் இருக்க வேண்டும் என்றாா் அவா்.
கூட்டத்தில், இந்து சமய அறநிலையத் துறை ஆணையா் க.வீ.முரளீதரன், கூடுதல் ஆணையா்கள் அ.சங்கா், ந.திருமகள், சி.ஹரிப்ரியா, இணை ஆணையா்கள் மற்றும் அலுவலா்கள் கலந்து கொண்டனா்.