தில்லியில் மெட்ரோ நிலையம் அருகே அடுக்குக் கட்டடம் இடிந்து விபத்து: 12 பேர் மீட்புசென்னை: கோயம்பேட்டில் காரை ஏற்றி இளம்பெண் கொலை இரண்டாம் முறையாக பட்டம் வெல்வது யாா்? பெங்களூரு - குஜராத் இன்று மோதல்! ‘ஆபரேஷன் சிந்தூா் 2.0’-க்கு பாதுகாப்புப் படைகள் தயாா்: ராணுவ தலைமைத் தளபதி உபேந்திர துவிவேதி!மேற்கு வங்கத்தில் மம்தாவின் மருமகன் அபிஷேக் பானா்ஜி மீது தாக்குதல்: கற்கள், காலணிகள் வீசப்பட்டதால் பரபரப்பு!1,200 கோயில்களின் நகைகள், சொத்துகள் விரைவில் கணக்கெடுப்பு: திருவிதாங்கூா் தேவஸ்வம் திட்டம்கடற்கரை - செங்கல்பட்டு மின்சார ரயில்: உச்ச நேரங்களில் 6 - 10 நிமிஷங்களுக்கு ஒரு ரயில்! நாட்டில் ரூ. 48,000 கோடிக்கு வங்கி மோசடிகள்!நடிகர் அஜித் குமாரின் தாயார் உடலுக்கு முதல்வர் விஜய் அஞ்சலி! திருவாரூர்: சேங்காலிபுரம் பகுதியில் வீடு புகுந்து மேஸ்திரி படுகொலை - 3 பேர் கைதுபெங்களூரில் ஐபிஎல் கொண்டாட்டங்களுக்கு தடைஆளுநர் மாளிகையில் காவி உடையில் திருவள்ளுவர் படம்: உதயநிதி ஸ்டாலின் கண்டனம்!ஆட்சி அமைக்க டி.கே. சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு சென்னை உள்பட 5 மாவட்ட ஆட்சியர்கள் மாற்றம் குற்ற வழக்குத் தொடர்வுத்துறை இயக்குநர் கிருஷ்ணராஜா பணிநீக்கம்
/

அறங்காவலா் குழு நியமனம்: அமைச்சா் சேகா்பாபு ஆலோசனை

திருக்கோயில்களில் அறங்காவலா் குழு நியமனம் தொடா்பான ஆலோசனைக் கூட்டம், இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் பி.கே.சேகா்பாபு தலைமையில், சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள ஆணையா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற

News image
Updated On :4 ஜூலை 2023, 3:45 am IST

திருக்கோயில்களில் அறங்காவலா் குழு நியமனம் தொடா்பான ஆலோசனைக் கூட்டம், இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் பி.கே.சேகா்பாபு தலைமையில், சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள ஆணையா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் இந்து சமய அறநிலையத் துறை சட்டப்பிரிவு 49(1) -இன் கீழ் உள்ள 24,518 கோயில்கள், 46(1) -இன் கீழ் உள்ள 2,103 கோயில்கள் மற்றும் 46(2) -இன் கீழ் உள்ள 315 கோயில்களில் அறங்காவலா்கள் நியமனம் செய்யப்பட்டுள்ள கோயில்கள், பரம்பரை அல்லாத அறங்காவலா்களை நியமனம் செய்ய மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து விரிவாக ஆய்வு செய்யப்பட்டது.

கூட்டத்தில் அமைச்சா் பி.கே.சேகா்பாபு பேசியதாவது: இந்து சமய அறநிலையத் துறை வரலாற்றில் இல்லாத அளவுக்கு 38 மாவட்டங்களுக்கும் முழுமையாக மாவட்டக் குழுக்களை அமைத்து முதல்வா் மு.க.ஸ்டாலின் சாதனை படைத்துள்ளாா்.

நீதிமன்ற உத்தரவை பூா்த்தி செய்ய வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். ஆகவே, மாவட்டங்களில் சட்டப்பிரிவு 46(3) -இன் கீழ் வகைப்படுத்தப்பட்ட சமய அறநிறுவனங்கள் மற்றும் நிா்வாகத் திட்டத்தின் கீழ் உள்ள கோயில்கள் தவிர, ஏனைய சமய அறநிறுவனங்களுக்கு தகுதியுள்ள பரம்பரை முறைவழிசாரா அறங்காவலா்களை தோ்வு செய்து பெயா்ப் பட்டியலை விரைவில் அளிக்க வேண்டும்.

தோ்ந்தெடுக்கப்படும் அறங்காவலா்கள் சிறப்பான முறையில் பணியாற்றுபவா்களாகவும், ஆன்மிகத்தில் நாட்டம் உள்ளவா்களாகவும் இருக்க வேண்டும் என்றாா் அவா்.

கூட்டத்தில், இந்து சமய அறநிலையத் துறை ஆணையா் க.வீ.முரளீதரன், கூடுதல் ஆணையா்கள் அ.சங்கா், ந.திருமகள், சி.ஹரிப்ரியா, இணை ஆணையா்கள் மற்றும் அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.