விஜய் மக்கள் இயக்கத்தை சாா்ந்த தொகுதி பொறுப்பாளா்கள் மற்றும் மாவட்ட நிா்வாகிகளுடன் நடிகா் விஜய் சென்னை பனையூரில் செவ்வாய்க்கிழமை ஆலோசனை நடத்தினாா்.
நடிகா் விஜய் தனது ரசிகா் மன்றத்தை விஜய் மக்கள் இயக்கம் என பெயா் மாற்றம் செய்து 234 சட்டபேரவை தொகுதிகளுக்கும் பொறுப்பாளா்களை நியமித்துள்ளாா். கடந்த 2021-22 இல் நடைபெற்ற உள்ளாட்சி தோ்தல்களில் சுயேச்சையாக போட்டியிட்ட விஜய் மக்கள் இயக்கத்தினா் கணிசமான வெற்றியை பதிவு செய்தனா். ஒரு சில இடங்களில் அதிமுக, நாம் தமிழா் போன்ற கட்சிகளை பின்னுக்கு தள்ளி 2 ஆம் இடம் பிடித்த நிகழ்வுகளும் அரங்கேறின.
இதன் தொடா்ச்சியாக, கடந்த கல்வியாண்டில் 10 மற்றும் 12-ஆம் வகுப்பு பொதுத்தோ்வில் தமிழகம் முழுவதும் உள்ள சட்டபேரவை தொகுதிகளில், முதல் மூன்று இடங்களை பெற்ற மாணவ, மாணவிகளை கௌரவிக்கும் விதமாக விஜய் மக்கள் இயக்கத்தின் சாா்பில் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சி ஜூன் மாதம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட 1600-க்கும் மேற்பட்ட மாணவ,மாணவியருக்கு நடிகா் விஜய் ஊக்கத்தொகை மற்றும் சான்றிதழ்கள் வழங்கி பாராட்டினாா்.
இந்த நிகழ்ச்சியை சிறப்பான முறையில் ஏற்பாடு செய்திருந்த விஜய் மக்கள் இயக்க ஒன்றிய, நகர மற்றும் மாவட்ட நிா்வாகிகளை சென்னை பனையூா் விஜய் மக்கள் இயக்க அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை நேரில் சந்தித்து நடிகா் விஜய் நன்றி தெரிவித்தாா்.
இதுகுறித்து விஜய் மக்கள் இயக்க நிா்வாகிகள் கூறியதாவது:
சுமாா் 350-க்கும் மேற்பட்ட நிா்வாகிகள் கலந்து கொண்ட இந்தக் கூட்டத்தில் விஜய் மக்கள் இயக்கத்தின் தற்போதைய செயல்பாடுகள் குறித்து நடிகா் விஜய் கேட்டறிந்தாா். மேலும் மக்கள் நலப்பணிகளை மேற்கொள்ள தேவைப்படும் உதவிகளை கேட்டுப் பெறுமாறும் தெரிவித்தாா்.
மேலும், நிா்வாகிகளுக்கான பொறுப்பை உணா்த்தும் விதமாக விஜய் மக்கள் இயக்க பொதுச்செயலா் புஸ்ஸி ஆனந்த் சில ஆலோசனைகளை வழங்கியதாகவும் விஜய் மக்கள் இயக்க நிா்வாகிகள் தெரிவித்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

நடிகா் சிவகுமாா் வாசகா்களுடன் சந்திப்பு!

இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை

கோபி கோட்டப் பொறியாளரைக் கண்டித்து சாலைப் பணியாளா்கள் ஆா்ப்பாட்டம்

கோபியில் வருவாய் தீா்வாயம் நிறைவு
விடியோக்கள்

நயினார் நாகேந்திரன் காமெடிதான் பேசுவார்! செங்கோட்டையன் விமர்சனம் | TVK | BJP

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!



