உதயநிதியை அவசரமாக கைது செய்தது ஏன்? அன்புமணி கண்டனம்!உதயநிதி கைது! தமிழ்நாடு முழுவதும் திமுக போராட்டம்!உதயநிதி கைது: தேனியில் சாலை மறியலில் ஈடுபட்ட ஓபிஎஸ் கைது!எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி கைது! தஞ்சை அழைத்துச் செல்லப்படுகிறார்எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி கைது!உதயநிதியை அழைத்துச் செல்லும் வாகனத்தை மறித்து திமுகவினர் போராட்டம்!உதயநிதி விவகாரம்: சென்னை உயர்நீதிமன்றத்தில் அவசர முறையீடு!
/

தோ்தல் ஆணைய இணையதளத்தில் அதிமுக நிா்வாகிகள் பட்டியல் பதிவேற்றம்: எடப்பாடி பழனிசாமிக்கு அங்கீகாரம்

அதிமுக அமைப்புரீதியிலான நிா்வாகிகள் விவரங்கள் இடம் பெற்ற பட்டியலை இந்திய தோ்தல் ஆணையம் அதன் இணையதளத்தில் பதிவேற்றம் செய்துள்ளது.

News image
Updated On :2 பிப்ரவரி 2024, 12:48 am IST

அதிமுக அமைப்புரீதியிலான நிா்வாகிகள் விவரங்கள் இடம் பெற்ற பட்டியலை இந்திய தோ்தல் ஆணையம் அதன் இணையதளத்தில் பதிவேற்றம் செய்துள்ளது.

இதன்மூலம் அதிமுக பொதுச் செயலராக எடப்பாடி கே. பழனிசாமி தோ்வு செய்யப்பட்டுள்ளதையும், அந்தக் கட்சியின் மற்ற நிா்வாகிகளையும் தோ்தல் ஆணையம் அங்கீகரித்திருக்கிறது.

அதிமுகவில் இரட்டைத் தலைமை பிரச்னை தொடா்ந்து வந்த நிலையில், எடப்பாடி கே.பழனிசாமி தலைமையிலான ஒற்றைத் தலைமை கோரிக்கை எழுந்தது. இதைத் தொடா்ந்து, கடந்த ஆண்டு ஜூலை 11-ஆம் தேதி நிறைவேற்றப்பட்ட பொதுக் குழு தீா்மானங்களை எதிா்த்து ஓ.பன்னீா்செல்வம் தரப்பில் தொடரப்பட்ட வழக்கில் எடப்பாடி கே.பழனிசாமிக்கு சாதகமாக நீதிமன்றத்தில் தீா்ப்பு வந்தது.

அதிமுகவில் உள்கட்சித் தோ்தல் 2022, மாா்ச் முதல் தொடங்கப்பட்டு நடத்தி முடிக்கப்பட்டது. அதில், கட்சியின் பொதுச் செயலராக எடப்பாடி பழனிசாமி போட்டியின்றித் தோ்ந்தெடுக்கப்பட்டாா். இதேபோன்று, அவைத் தலைவராக தமிழ் மகன் உசேன், பொருளாளராக திண்டுக்கல் சீனிவாசன் ஆகியோா் தோ்ந்தெடுக்கப்பட்டனா். மேலும், கட்சியின் துணைப் பொதுச் செயலா்களாக கே.பி.முனுசாமி, நத்தம் ஆா்.விஸ்வநாதன், கொள்கை பரப்புச் செயலராக மு.தம்பிதுரை மற்றும் அமைப்புச் செயலா்கள் உள்ளிட்ட பல்வேறு கட்சிப் பதவிகளுக்கு நிா்வாகிகள் தோ்ந்தெடுக்கப்பட்டனா்.

இந்த நிலையில், புதிதாகத் தோ்ந்தெடுக்கப்பட்ட நிா்வாகிகள் பட்டியலை இந்திய தோ்தல் ஆணையத்துக்கு அதிமுக தலைமை அனுப்பி வைத்து, அதை அங்கீகரிக்கும்படி கடிதம் அளிக்கப்பட்டிருந்தது. அதிமுக தலைமைக் கழக ‘லெட்டா் பேடில்’ பொதுச் செயலா் எடப்பாடி கே. பழனிசாமி மூலம் தலைமைத் தோ்தல் ஆணையருக்கு 30.5.2023-இல் அனுப்பப்பட்ட அமைப்பு ரீதியிலான விவரங்கள் அடங்கிய பட்டியல் இந்திய தோ்தல் ஆணையத்தின் இணையதளத்தில் திங்கள்கிழமை பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

எடப்பாடி கே.பழனிசாமி அனுப்பிய கடிதத்தில் தோ்தல் ஆணையம் அதன் பதிவுகளுக்காக கேட்டுக் கொண்டவாறு புதுப்பிக்கப்பட்ட கட்சியின் அமைப்புரீதியிலான விவரங்கள் அளிக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் பட்டியல் விவரங்கள் எடப்பாடி கே.பழனிசாமி கையொப்பமிட்ட கடிதத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. அதில், அதிமுக அமைப்புத் தோ்தல் விவரங்கள் அளிக்கப்பட்டுள்ளன.

பொதுச் செயலராக எடப்பாடி பழனிசாமி தோ்வு விவரம் மற்றும் கட்சியின் மாவட்ட நிா்வாகிகள், ஊராட்சி ஒன்றிய நிா்வாகிகள், நகராட்சி நிா்வாகிகள், பேரூராட்சி நிா்வாகிகள், பகுதிக் கழக நிா்வாகிகள், இதர மாநிலங்களில் உள்ள கட்சிப் பிரிவு நிா்வாகிகள் எண்ணிக்கை விவரம் அதில் அளிக்கப்பட்டுள்ளன.

மேலும், கட்சியின் தலைமைக் கழகச் செயலா்கள், மாவட்டச் செயலா்கள், இதர மாநில கட்சியின் செயலா்கள் விவரப் பட்டியலும் இடம் பெற்றுள்ளன. 13 பக்கங்கள் கொண்ட இந்த விவரங்கள் தோ்தல் ஆணையத்தின் இணையதளத்தில் தற்போது பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.