தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவியை மாநில பாஜக தலைவர் அண்ணாமலை சந்தித்து திமுக நிர்வாகிகளின் சொத்து விவரங்கள் உள்ளிட்ட இரண்டாம் கட்ட கோப்புகளை வழங்கினார்.
சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் இந்த சந்திப்பானது நடைபெற்றது.
சந்திப்பின்போது, திமுக அமைச்சர்கள், நிர்வாகிகளின் சொத்து விவரங்கள் உள்ளிட்ட இரண்டாம் கட்டக் கோப்புகளை ஆளுநரிடம் வழங்கினார் அண்ணாமலை. ரூ. 5,600 கோடி மதிப்பிலான ஊழல் விவரங்களையும் அளித்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிக்க | செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவல் ஆக. 8 வரை நீட்டிப்பு!
இதுகுறித்து அண்ணாமலை தனது ட்விட்டரில், 'இன்று, பாஜக மூத்த தலைவர்களுடன், தமிழக ஆளுநர் ஆர்.என். ரவியைச் சந்தித்தோம்.
ஆளுநரிடம், திமுக அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் திமுக முதல் குடும்பத்துடன் தொடர்புள்ள பினாமி தகவல்கள் அடங்கிய, திமுக ஃபைல்ஸ் பகுதி 2 ஆவணங்களையும், மேலும், ரூ. 5,600 கோடி மதிப்பிலான 3 ஊழல் குறித்த ஆதாரங்களையும் வழங்கி, இது தொடர்பாக அவர் தலையிட்டு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று கோரிக்கை விடுத்துள்ளோம்' என்று பதிவிட்டுள்ளார்.
திமுக அமைச்சர்கள், நிர்வாகிகளின் சொத்து விவரங்களை 'திமுக ஃபைல்ஸ் 2' என்ற பெயரில் ஜூலை இறுதிக்குள் வெளியிடுவதாக அண்ணாமலை கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
ஆளுநருடனான சந்திப்பின்போது பாஜக நிர்வாகிகள் கரு நாகராஜன், கராத்தே தியாகராஜன் மற்றும் பாஜக வழக்கறிஞர்கள் உடனிருந்தனர்.
இதையும் படிக்க | மத்திய அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானம் ஏற்பு!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.