சுரங்கப்பாதை அமைக்கும் பணி காரணமாக திருச்செந்தூர் ரயில் போக்குவரத்தில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
கோவில்பட்டி - நல்லி ரயில் நிலையங்களுக்கு இடையே உள்ள ரயில்வே கடவுப் பாதை அகற்றப்பட்டு, புதிய சுரங்கப் பாதை அமைக்கும் பணிகள் நடைபெறுகின்றன.
இதையொட்டி, ஆகஸ்ட் 1, 2 ஆகிய தேதிகளில் திருச்செந்தூர் ரயில் போக்குவரத்தில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
பகுதியளவில் ரத்து...
திருச்செந்தூர் - பாலக்காடு விரைவு ரயில் (16732), பாலக்காடு - திருச்செந்தூர் விரைவு ரயில் (16731) ஆகஸ்ட் 1, 2 தேதிகளில் விருதுநகர்- திருச்செந்தூர் ரயில் நிலையங்கள் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.
நேரம் மாற்றம்...
திருவனந்தபுரம் - திருச்சிராப்பள்ளி விரைவு ரயில் (22628) ஆகஸ்ட் 1, 2 தேதிகளில் திருவனந்தபுரத்திலிருந்து 40 நிமிடம் தாமதமாக பகல் 12.15 மணிக்குப் புறப்படும்