சிஜேபி பேரணி: எஃப்.ஐ.ஆர்-ல் கொலை முயற்சி உள்பட 13 குற்றச்சாட்டுகள் சோ்ப்பு10 கிலோ எரிவாயு சிலிண்டா் அறிமுகம்: 4 மணி நேரத்தில் விநியோகம்!கிளாம்பாக்கம் - செங்கல்பட்டு மெட்ரோ திட்ட அறிக்கைக்கு டெண்டர்!தாம்பரம் - தென்காசி இடையே ஜூலை 30 முதல் 6 சிறப்பு ரயில்கள்வினாத்தாள் முறைகேடு! 10 ஆண்டுகள் சிறை; ரூ. 50 லட்சம் அபராதம்! சட்டத் திருத்த மசோதா நாளை தாக்கல்! சா்வதேச குற்றவியல் நீதிமன்ற தலைமை வழக்குரைஞா் பதவிநீக்கம்!
/

10 , 11-ம் வகுப்பு துணைத்தேர்வு: ஹால் டிக்கெட் எப்போது?

10 மற்றும் 11 ஆம் வகுப்பு துணைத்தேர்வு ஹால் டிக்கெட்டை வரும் ஜூன் 20 ஆம் தேதி முதல் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என தேர்வுகள் துறை இயக்ககம் தெரிவித்துள்ளது.

News image

கோப்புப்படம்

Updated On :15 ஜூன் 2023, 4:27 pm IST

10 மற்றும் 11 ஆம் வகுப்பு துணைத்தேர்வு ஹால் டிக்கெட்டை வரும் ஜூன் 20 ஆம் தேதி முதல் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என அரசுத் தேர்வுகள் துறை இயக்ககம் தெரிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் 10 மற்றும் 11 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் கடந்த மே 19 ஆம் தேதி வெளியாகின.

10 ஆம் வகுப்பு தேர்வில் தமிழ்நாடு முழுவதும் 91.39 % மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றனர். அதுபோல 11 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 90.93 சதவிகிதம் மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றனர். 

இந்நிலையில், 10, 11 ஆம் வகுப்பில் தேர்ச்சி அடையாத மாணவ, மாணவிகள் மே 23 ஆம் தேதி முதல் மே 27 ஆம் தேதி வரை துணைத் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் என்றும் ஜூன் 27 முதல் ஜூலை 4 ஆம் தேதி வரை துணைத்தேர்வு நடைபெற உள்ளதாகவும் அரசுத் தேர்வுகள் துறை இயக்ககம் தெரிவித்திருந்தது. 

இதையடுத்து 10 மற்றும் 11 ஆம் வகுப்பு துணைத் தேர்வுக்கான நுழைவுச்சீட்டு(ஹால் டிக்கெட்) ஜூன் 20 ஆம் தேதி முதல் பள்ளிக்கல்வித்துறையின் https://www.dge.tn.gov.in/ என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.