நானும் இத்தாலியும் எதற்கும் கெஞ்ச மாட்டோம்! டிரம்ப்பின் பேச்சுக்கு மெலோனி கண்டனம்! ஜப்பானில் தொடக்கப் பள்ளியில் பயங்கர தீவிபத்து: 11 பேர் காயம் நீட்: மனநல ஆலோசனைக்கு உதவி எண்கள் அறிவிப்பு பசுமை ஆற்றல் வளர்ச்சியை வலுப்படுத்த 5 புதிய மண்டலங்கள்: அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் பாராட்டுக்குரியது: கமல்ஆசிரியர் தகுதித்தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 16 பேர் பலி! தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!
/

அதிமுக கூட்டணிக்கு அண்ணாமலை எதிர்ப்பு?

அதிமுகவுடன் கூட்டணி அமைத்துப் போட்டியிட அண்ணாமலை எதிர்ப்பு என தகவல் வெளியாகியுள்ளது.  அதிமுக கூட்டணி

News image

கோப்புப்படம்

Updated On :18 மார்ச் 2023, 9:22 am IST


சென்னை: அதிமுகவுடன் கூட்டணி அமைத்துப் போட்டியிட அண்ணாமலை எதிர்ப்பு என தகவல் வெளியாகியுள்ளது. 

சென்னை அமைந்தகரையில் உள்ள திருமண்டபத்தில் வெள்ளிக்கிழமை தமிழ்நாடு பாஜக மாநில நிர்வாகிகள் மற்றும் அணி தலைவர்கள் கூட்டம் நடைபெற்றது. 

இதில் பங்கேற்று பேசிய தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை,  
தமிழ்நாட்டில் பாஜக தனியாக இருந்தால் மட்டுமே கட்சியை வளர்க்க முடியும். 

அதிமுகவுடன் கூட்டணி ஏற்பட்டால் தலைவர் பதவியை ராஜிநாமா செய்துவிட்டு சாதாரண தொண்டனாக கட்சி பணி செய்வேன்.

பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேசுவதற்கு நேரம் கேட்டுள்ளேன். 

கர்நாடக பேரவைக்கு தேர்தல் நடைபெற உள்ளதால் மே 10 ஆம் தேதி வரை கட்சி பணிகளில் தீவிரமாக இருப்பேன்.

அண்ணாமலையின் பேச்சால் கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டதாகவும், கட்சியின் மூத்த நிர்வாகிகள் இடையே சலசலப்பு ஏற்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. 

இந்நிலையில், பாஜக உள்கட்சி விவகாரம் வெளியே கூறமுடியாது, நடக்காத ஒன்றை சித்தரித்துள்ளனர் என்று நாராயணன் திருப்பதி விளக்கம் அளித்துள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.