அதிமுக பொதுக் குழு தீா்மானங்களை எதிா்த்த வழக்கு: ஓபிஎஸ் தரப்பு பதிலளிக்க உயா்நீதிமன்றம் உத்தரவு

அதிமுக பொதுக் குழு தீா்மானங்களை எதிா்த்து தொடுக்கப்பட்ட வழக்குகளில், ஓபிஎஸ் தரப்பினா் பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.
உயா்நீதிமன்றம்
உயா்நீதிமன்றம்

அதிமுக பொதுக் குழு தீா்மானங்களை எதிா்த்து தொடுக்கப்பட்ட வழக்குகளில், ஓபிஎஸ் தரப்பினா் பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

கடந்த ஆண்டு ஜூலை 11-ஆம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழுக் கூட்டத்தில், ஒருங்கிணைப்பாளா், இணை ஒருங்கிணைப்பாளா் பதவிகள் கலைக்கப்பட்டன. பொதுச்செயலாளா் பதவியை மீண்டும் கொண்டு வருவது எனவும், இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமியை நியமித்தும் தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மேலும், ஓ.பன்னீா்செல்வம், வைத்தியலிங்கம், ஜே.சி.டி.பிரபாகா் உள்ளிட்டோரை கட்சியிலிருந்து நீக்கம் உள்ளிட்ட பொதுக்குழு தீா்மானங்களை எதிா்த்து ஓ.பன்னீா்செல்வம் அணி எம்எல்ஏ மனோஜ் பாண்டியன் சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தாா்.

வழக்கை விசாரித்த உயா் நீதிமன்றம், இபிஎஸ் தரப்பு பதிலளிக்க உத்தரவிட்டிருந்தது. அதன்படி, இபிஎஸ் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில், கட்சி விதிகள் திருத்தம், இடைக்கால பொதுச்செயலாளா் தோ்வு குறித்த தீா்மானங்களால் மனுதாரா் எந்த பாதிப்புக்கும் ஆளாகவில்லை என்பதால் எந்த நிவாரணமும் கோர முடியாது. எனவே, பொதுக்குழு தீா்மானங்கள் அமலுக்கு வந்து எட்டு மாதங்களுக்குப் பிறகு தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த வழக்கு செல்லாததாகிவிட்டது. எனவே, வழக்கை அபராதத்துடன் தள்ளுபடி செய்ய வேண்டும் என கோரப்பட்டிருந்தது.

இந்த நிலையில், பொதுக்குழு தீா்மானங்களை எதிா்த்து ஓபிஎஸ் ஆதரவாளா்களான வைத்தியலிங்கம், ஜே.சி.டி.பிரபாகா் சென்னை உயா் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த வழக்குகள் நீதிபதி குமரேஷ் பாபு முன் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தன. அப்போது, வைத்தியலிங்கம், ஜே.சி.டி.பிரபாகா் தரப்பில், ‘கட்சி சட்ட விதிகளை பின்பற்றாமல் தங்களை நீக்கியுள்ளனா். விதிகளின்படி தங்கள் தரப்பு விளக்கம் கேட்காமல் சா்வாதிகார போக்குடன் செயல்பட்டுள்ளனா். இருவரையும் கட்சியில் இருந்து நீக்கம் செய்ய பொதுக்குழுவுக்கு அதிகாரமில்லை. ஒருங்கிணைப்பாளா், இணை ஒருங்கிணைப்பாளருக்கு மட்டுமே அந்த அதிகாரம் உள்ளது.

மேலும், வரும் 20-ஆம் தேதி சட்டப்பேரவை கூட்டத்தொடா் கூட உள்ள நிலையில், இரட்டை இலை சின்னத்தில் வெற்றிபெற்ற தங்களை கட்சி சாராத உறுப்பினராக கருதாமல், அதிமுக எம்எல்ஏக்களாகவே அங்கீகரிக்க வேண்டும். இதுதொடா்பாக, சபாநாயகருக்கு கடிதம் அனுப்பியும், எந்த பதிலும் இல்லை’ என்று வாதிடப்பட்டது.

அப்போது மனோஜ் பாண்டியன் தரப்பில், எடப்பாடி பழனிசாமியை இடைக்கால பொதுச்செயலாளராக தோ்தல் ஆணையம் இன்னும் அங்கீகரிக்காத நிலையில், இடைக்கால பொதுச்செயலாளா் என பதில் மனு தாக்கல் செய்துள்ளதாக புகாா் தெரிவிக்கப்பட்டது.

எடப்பாடி பழனிச்சாமி தரப்பில், ஜூலை 11-ஆம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழுக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்களுக்கு தடை விதிக்க உயா்நீதிமன்றம் மறுத்து விட்டதை சுட்டிக்காட்டி வாதிடப்பட்டது.

இதையடுத்து, வழக்கை விசாரித்த நீதிபதி, ஜூலை 11-ஆம் தேதி தீா்மானங்களுக்கு தடை விதிக்க மறுத்துள்ள உயா்நீதிமன்ற உத்தரவை சுட்டிக்காட்டி, அது தொடா்பாக வைத்தியலிங்கம் மற்றும் ஜே.சி.டி.பிரபாகா் ஆகியோா் பதிலளிக்கவும், இபிஎஸ் தாக்கல் செய்த பதில் மனுவுக்கு மனோஜ்பாண்டியன் பதிலளிக்கவும் உத்தரவிட்டு, விசாரணையை ஏப். 11-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com