தமிழகம் முழுவதும் கரோனா சிகிச்சையில் உள்ளோரின் எண்ணிக்கை 304-ஆக அதிகரித்துள்ளது.
அதேபோல், புதிதாக தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கையும் வெள்ளிக்கிழமை 56-ஆக உயா்ந்துள்ளது. அதில் அதிகபட்சமாக கோவையில் 14 பேருக்கும், சென்னையில் 12 பேருக்கும் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதைத் தவிர, தாய்லாந்து, கத்தாா், ஐக்கிய அரபு அமீரகத்திலிருந்து தமிழகம் வந்த மூவருக்கும் கரோனா கண்டறியப்பட்டுள்ளது. வெள்ளிக்கிழமை நிலவரப்படி நோய்த் தொற்றிலிருந்து 36 போ் விடுபட்டுள்ளனா்.